Wednesday, August 10, 2016




            “ஸ்ரீ குருப்யோ நமஹ”


குருப்பெயர்ச்சி பலன்கள் 02-08-2016  TO 02-09-2017



குருப்பெயர்ச்சி பலன்கள்  ..துர்முகி வருடம்  ஆடி மாதம் பதினெட்டாம் நாள்
ஆங்கில வருடம் .ஆகஸ்டு 2ஆம் தேதி 2௦16 வருடம்  குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து  கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் ...

பொதுவாக குரு பகவான் ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆம் வீடுகளில் பயணிக்கும் போது அந்த ராசிக்கு நன்மைகள் அதிகம் நடக்கும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன .  நவ கிரகங்களில் குரு பகவான் மட்டுமே முழு சுபர் .. இவரின் காரகங்கள் புத்திர பாக்கியம் தருவது, நல்ல கல்வி ஞானம் தருவது , திருமண தடைகளை விலக்குவது , பண வருவாயை அதிகரிப்பது போன்றவையாகும் .., நல்ல குணங்களுக்கு அதிபதி குருவாகும் ., நேர்மையான சிந்தனை,, நல்ல கல்வி , உயர் படிப்பு , வங்கி வேலை , ஆசிரியர் வேலை போன்றவற்றிக்கும்  குருவே காரண கர்த்தா ....

குருவின் பார்வை பலம் இன்னும் நல்ல பலன்களை தரும்.  வேலை மாற்றம்,
வேலை விஷயமாக வெளிநாடு செல்லுதல் , மேல் படிப்புக்கு வெளிநாடு செல்லுதல் ,குடியுரிமை பெறுதல் , வீடு , மனை , நிலம் வாங்க குருபலம் அவசியம் , ஏனெனில் பணம் கிடைக்க குருவருள் வேண்டும் , வங்கி கடனாகவோ, வியாபார லாபமாகவோ பணம் வேண்டும் , சேமிப்புக்கும் குருவருள் வேண்டும் ,,, ஆக குரு பகவான் இருக்கும் வீட்டை விட பார்க்கும் வீடு பலப்படும் என்பது சோதிட விதி .

இனி இந்த குருபெயர்ச்சி  12 ராசி அன்பர்களுக்கும்  என்ன மாதிரியான பலனை செய்யபோகிறது என்பதனை பார்ப்போம் .. .















மேஷ ராசி :

      மேஷ ராசி அன்பர்களுக்கு  குரு பகவான் இதுவரை 5 ஆம் வீட்டிலிருந்து நன்மை செய்தார் .. இனி அவர் 6ஆம் வீடான கன்னி ராசிக்கு
செல்கிறார் .. காலபுருஷ தத்துவப்படி  கன்னிதான் ஆறாவது வீடு.
இது குருவிற்கு மறைவு வீடு .  மேஷத்திற்கு குரு 9,மற்றும் 12 ஆம்  வீடுகளுக்கு
அதிபதி .9 ஆம்  வீட்டு அதிபதி 6 இல் மறைவது சிறப்பல்ல .. எனினும் அவரின் பார்வை பலம் நன்மை செய்யும் . இவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஞாயமான நல்ல பலன்கள் , வாய்ப்புக்கள் தள்ளி போகும் ..
12ஆம் வீட்டு அதிபதி 6 இல் மறைவது ஒருவிதத்தில் நல்லதே.
அனாவசிய செலவுகள் இருக்கும் .. ஒருசிலர் குடும்பத்திற்காக கடன் வாங்கி
செலவு செய்ய நேரிடும் ,,சேமிப்புகள் கரையும் , எனவே நன்றாக யோசித்து
செலவு செய்ய வேண்டும் .வருமான குறைவு இருக்கும் ..சனியின் 7வது பார்வை மேஷ ராசியின் 2ஆம் வீட்டுக்கு விழுவதால் குருவின் 9ஆம் பார்வையினால் கிடைக்கும் நன்மைகள் தடைபடும் .. இது ஜனவரி மாதம்
17 தேதி வரை இருக்கும்  அதன் பிறகு நல்ல வருமானம் இருக்கும் ..
எதையும் சமாளிக்கலாம் ..

குருவின் பார்வை மேஷ ராசியின் 1௦ ஆம் வீடு , 12 ஆம் வீடு மற்றும் 2ஆம் வீடுகளுக்கு  விழுவதால் அந்த வீடுகள் பலப்படும் ..

குருவின் 5 ஆம் பார்வை ஜீவனவீட்டுக்கு  விழுவதால் , வேலை , வியாபாரம் , தொழில் விருத்தியாகும் ... ஆனால் வியாபாரமோ , வேலையோ தானே செய்யவேண்டும்  யாரையும் நம்பி விட்டு செல்வது  நன்மை பயக்காது .
பொதுவாக அரசியல் , கலை தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் .
அடிமை தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வுடன் நீண்ட தூர தேசங்களுக்கு சென்று பணி செய்யவேண்டி இருக்கலாம் .


அடுத்து குரு தனது 7 வது பார்வையாக மேஷ ராசியின் 12 வது வீட்டை

பார்கிறார் .. இதனால் ஒரு சிலருக்கு வெளி நாடு சென்று கஷ்டபட வேண்டி

இருக்கும் . குரு சுப கிரகம் . எனவே சுப செலவுகள் வாசலை தட்டும் ..

எனவே சேமிப்புகள் கரையும் ,, அத்தியாவசிய செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டி வரும் ,, கடன் அடைக்க நீண்ட நாட்களாகும் என்பதால் ,, கவனம் தேவை .








அடுத்து  குரு பகவான் தனது 9ஆம் பார்வையாக , மேஷ ராசியின் 2 வது வீட்டை
பார்கிறார் . இதனால் இந்த ராசிக் குழந்தையின் கல்வி  மேன்மை அடையும் .   தாராள  பண வரவு இருக்கும் . ஜனவரி மாதம் வரை பண வரவில் ஏற்ற இறக்கம் இருக்கும் . அதன் பிறகு நிலைமை சீராகும் .

பொதுவில் இந்த குருபெயர்ச்சி  மேஷ ராசி அன்பர்களுக்கு  சுமாராகத்தான் இருக்கும்  பரிகாரம் செய்து கொள்வது நல்லது .

வியாழகிழமை தோறும் ஒரு வருடத்திற்கு  தக்ஷிணாமூர்த்திக்கு நெய் தீபம்
ஏற்றி வழிபடவும் ..அதே போல் அஷ்டம சனி நடப்பதால் , சனீஸ்வரனுக்கு
எள் தீபம் ஏற்றி வழிபடவும் .. அல்லது சனிக்கிழமை ,ஹனுமார் கோவிலுக்கு சென்று வழிபடவும் .. அடுத்த குரு பெயர்ச்சி மிக சிறப்பாக இருக்கும் ,,


=====================================================================================

ரிஷப ராசி :



ரிஷப ராசிக்கு தற்காலம் குருபகவான் 4வது ராசியில் இருந்து  கொடுத்த பலன்கள் அவ்வளவு நன்மை செய்யவில்லை ,, ஆனால் தற்போது 5ஆம் இடமான கன்னி ராசிக்கு செல்வது சிறப்பு.  கன்னி ராசி குருவின் நட்பு வீடு ஆகும்.மேலும் புதன் வீட்டில் குரு , கல்விக்காரகனோடு சேர்ந்த குரு , நிபுணத்துவத்தை கொடுப்பார் ..அவர் பார்க்கும்  வீடுகள் பலப்படும் .
இதனால் ரிஷப ராசி அன்பர்கள் மிக நல்ல பலனை அடைவார்கள் . ஜனவரியில் சனி பகவான் ரிஷபத்திற்கு 8 க்கு வருவார் . ரிஷபத்திற்கு அஷ்டம சனி பெரிய தீமைகளை செய்யாது , ஏனெனில் ரிஷப ராசி அன்பர்களுக்கு சனி நல்லவர் ..
பொதுவாக ரிஷப ராசி , மற்றும் துலாராசி அன்பர்களுக்கு குரு நல்லவர் இல்லை ..அதிக நன்மைகளை செய்ய மாட்டார் .. ஆனால் குருவின் பார்வை
நன்மை செய்யும்.











குருவின் பார்வையான 5, 7, 9 ஆகிய பார்வைகள் ரிஷப ராசிக்கு 9, 11, மற்றும் ராசியில் விழும் .. இந்த மூன்று பார்வைகளுமே நல்ல வீடுகளுக்கு விழுவதால் , சிறப்பான பலன்களே நடக்கும்

இவர் 5 ஆம் பார்வையாக 9 ஆம் வீட்டை பார்பதால் தந்தை வழி உறவுகள்
பலப்படும் .பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அவைகள் மூலம் நல்ல வருமானம் இருக்கும் . தந்தையின் உடல் நிலை நன்றாக இருக்கும் . சிலர் வெளிநாடு சென்று  படிக்க முயன்றால் அவை வெற்றிகரமாக அமையும் .
வேலை விஷயமாகவும் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் , வயதானவர்கள் மகளின் /மகனின் வீட்டுக்கு வெளிநாடு செல்ல வேண்டி வரும் . ஒரு சிலர் குருமார்களை தரிசிக்க தீர்த்த யாத்திரை செல்வார்கள் .
அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும் .



அடுத்து குருவின் 7வது பார்வையால் ரிஷப ராசியின்  11 வது வீடான
மீன ராசிக்கு விழுகிறது .

இதன் பலன் இவர்களின் வியாபாரத்தில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்
வேலையில் இருப்பவர்களுக்கு  தன் உழைப்பால் நல்ல லாபம் கிடைக்கும்
முதலீடுகளாலும்  நல்ல லாபம் கிடைக்கும் .
மூத்த சகோதரம் இருந்தால் அவர்கள் நன்றாக இருப்பார்கள் . அவர்களால் இந்த ராசி அன்பர்களும் பயன் அடைவார்கள்
5ஆம் வீட்டில் குரு அமர்வதால் பூர்வ புண்ணியம் பலப்படும் .நீங்கள் செய்த புண்ணிய பலன்கள்  தற்போது நன்மை செய்யும் .,, தந்தை வழி சொத்து பிரச்சனைகள் இருந்தால்  நல்ல விதமாக முடிவுக்கு வரும் ...

அடுத்து குருவின் 9 வது பார்வை  ரிஷபத்தில் விழுவதால் . ராசி அன்பர்கள்
உடல் நல குறைபாடு இருந்தால்  நலம் பெறுவார்கள் .. சுறுசுறுப்பாக இருப்பார்கள்
இவர்களின் குழந்தைகளால் புகழ், மதிப்பு ,பெருமை போன்றவை கிடைக்கும்
ஒரு சிலர் தங்கள் மகன் அல்லது மகளின் திருமணம் நடக்க முயற்சிப்பார்கள் ,, அதுவும்  நல்லவிதமாக நடக்கும் ..ஒருசில வயதான ரிஷப ராசி அன்பர்கள் தாத்தா , பாட்டி  ஆக வாய்ப்புள்ளது .  ஒருசில ரிஷப
ராசி இளவயதினருக்கு திருமண யோகம் வருவதால் திருமணம் நடக்கும்

பரிகாரம் :  சனிக்கிழமைகளில் வெங்கடேச பெருமாள் வழிபாடும்,
 வியாழகிழமையில்  குருவின் வழிபாடும்  மேலும் சிறப்பான பலன்களை தரும் ..





மிதுன ராசி :

மிதுன ராசி அன்பர்களுக்கு , இதுவரை 3ஆம் வீட்டில் இருந்த குருபகவான்
2-8-2016 அன்று கன்னி ராசிக்கு மாறுகிறார் . இது உங்கள் ராசிக்கு நாலாவது
வீடு  ஆகும் . இதுவரை குருவால் நிறைய அலைச்சல்கள் , சிரமங்கள் , நிம்மதி இன்மை போன்றவைகள் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் .
அவை யாவும் மறைந்து நல்ல பலன்கள் நடக்க இருக்கிறது . மிதுன ராசிக்கு
குரு கேந்திர ராசிகளுக்கு அதிபதி ஆவார் .
ஒரு விதத்தில் பாதகாதிபதியும் ஆவர் .. ஆனால்  இவர் இன்னொரு கேந்திரத்தில் அமர்வது நன்மையே பயக்கும் .. ஒரு விதத்தில் குருவின் பார்வை பெரும் ராசிகள் பலம் பெறும்.. மிதுன ராசிக்கு குருவின் பார்வை
8,,10,,12 ஆம் வீடுகளுக்கு ஏற்படுகிறது ..
பொதுவாக நாலில் குரு அமர்ந்தால் நாட்டை விட்டு வெளிய செல்லவேணும்
என்று ஒரு சோதிட பழமொழி உண்டு . அங்கு சென்றாலும் பிழைக்க வேண்டாமா? அதற்காக செல்ல வேண்டி இருக்கும் .
குரு நாலில் அமர்வதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படலாம் .. ஆனால்
கல்வி மேம்படும் , வெற்றி கிட்டும் , வண்டி வாகனம் , வீடு இவைகளில் பராமரிப்பு செலவு உண்டாகும் .

அடுத்து குருவின்  5ஆம் பார்வை மிதுன ராசிக்கு எட்டாம் வீடான மகரத்திற்கு விழுகிறது . எனவே தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம் .ஜாமீன் போடுவது வேண்டாம் .  எல்லோரிடமும் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. மற்றொரு விதத்தில் குருவின் பார்வை விழும் எட்டாம் இடம்  சில நன்மைகளையும் செய்யும், வெளிநாட்டு தொடர்புகள் நன்மை பயக்கும் , வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு விசா கிடைத்து செல்லவேண்டி இருக்கும் .


அடுத்து குருவின் ஏழாம் பார்வை  மிதுனராசியின் பத்தாம் வீட்டில் விழும்.

இந்த ராசிகாரர்களில் ஒருசிலருக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும்
தொழில் மேம்படும் , வியாபாரம் நன்றாக நடக்கும் , கடன்கள் கட்டுக்குள் இருக்கும்..தொழிலில் புதிய ஒப்பந்தகள் கிடைக்கும் ,, வியாபார, அபிவிருத்தி இருக்கும் .

அரசு பணியாளர்கள் , பதவி உயர்வு பெறுவார்கள் , இட மாற்றம் இருக்கும்
ஒரு சிலருக்கு விருப்பம் இல்லாத இட மாற்றம் இருக்கும் . பொருது கொள்ள வேண்டும்


அடுத்து குருவின் 9ஆம் பார்வை மிதுனத்தின் 12 ஆம் வீட்டுக்கு விழுகிறது
இதனால் சுப செலவுகள் ஏற்படும் . குடும்ப சொத்தை விற்க ஆசை ஏற்படும்
அப்படி விற்றால் அந்த பணம் வேறு வழியில் செலவாகும் ,, தள்ளிபோடுவது நல்லது ... கோர்ட்டு வழக்கு இருந்தால் தற்போது முடிவுக்கு வருவது கடினம்
தளி போடுவது நலம்

பரிகாரம் :  வயதான பெரியவர்களுக்கு உதவுங்க... குலதெய்வத்தை வழிபடவும்  நன்மைகள் நடக்கும்.




கடக ராசி :



இதுவரை  கடக ராசிக்கு குரு பகவான் 2 ஆம் இடத்தில் இருந்து நல்ல பலன்களை செய்து கொண்டிருந்தார் .. தற்காலம் 3ஆம் இடமான கன்னிக்கு சென்றுள்ளார் . இந்த இடம் கடக ராசிக்கு அவ்வளவு நல்ல இடம் இல்லை .
மறைவு ஸ்தானம் .இதனால் நிறைய நல்ல பலன்கள் நடப்பது கடினம்
அனால் குருவின் பார்வை பலம் நன்மை செய்யும்

இந்த ராசி அன்பர்களின்  முயற்சிகள் வெற்றி பெரும் , இந்த ராசி இளைய பருவத்தினருக்கு  திருமண யோகம் கிடைக்கும் ,, புத்திர பாக்கியம் கிடைக்கும் ,நீண்ட தூர பிரயாணம்  செய்ய வேண்டி வரும் .  இளைய சகோதரத்தினால் , லாபம் உண்டு .  ஒரு சில கலைஞர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் ..வெளிநாட்டுக்கு சென்று இசை நிகழ்ச்சி செய்து வர
சந்தர்ப்பம்  உருவாகும் ....

இனி குரு பகவான் தன் 5 ஆம் பார்வையாக கடகத்தின் 7ஆம் வீட்டை பார்க்கிறார் . இதனால்  திருமணதிற்கு காத்துகொண்டிருக்கும் இளவயதினருக்கு திருமணம் நடக்கும் . ஒரு சிலரின் காதல் திருமணம் பெரியவர்களின் சம்மதத்தோடு நல்லபடியாக நடக்கும் . பிரிந்திருந்த கணவன்
மனைவி ஒன்று சேர வழி பிறக்கும் .  கூட்டு வியாபாரம் செய்பவர்கள் நல்லினகத்தோடு  இருப்பார்கள் , நெருங்கிய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள் . உங்களுடன்  பணிபுரிபவர்களுடன்  நல்ல ஒற்றுமை ஏற்படும்










இனி கடக ராசியின் 9ஆம் வீடான மீனத்தை  குரு தன 7 ஆம் பார்வையால்
பார்கிறார் .எனவே பாக்யஸ்தானம் வலுபெறுகிறது  இதன் பலனாக ஒருசிலர்
வெளி நாடுகளுக்கு சென்று வர சந்தர்ப்பம் கூடிவரும் . அதனால் லாபங்கள் கிடைக்கும் . பாக்யதிபதியான குரு 3 ல் மறைவதால்  தந்தையிடமிருந்து கிடைக்கும் நன்மைகள்  குறையும் . அனால் தந்தையின் உடல்நிலை

நன்றாக இருக்கும் . ஒரு சிலர் காசி , ராமேஸ்வரம்  போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று வருவார்கள் . அப்பா வழி சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் அவை சரியாகும் ..


அடுத்து குருவின் 9ஆம் பார்வை  கடகத்தின்  11 ஆம் வீட்டுக்கு விழுகிறது
இதுவும் நன்மை செய்யும் இடமாகும் ..பேச்சு போட்டி , பாட்டு போட்டி போன்றவற்றில் கலந்துகொள்பவர்களுக்கு  வெற்றி கிடைக்கும் ..ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும், சொந்த வியாபாரம், கூட்டு வியாபாரம்
போன்றவை நல்ல லாபம் தரும் ..நண்பர்கள் மூலமாகவும் நிறைய லாபங்கள் கிடைக்கும் ...

பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில் , குருவின் பார்வை பலத்தால் கடக ராசி காரர்கள்  மிகுந்த நல்ல பலனை பெறுவார்கள் ..


பரிகாரம் :   குரு தலமான திருசெந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வழி பட நன்மைகள் நடக்கும்



















சிம்மம் ராசி :

இதுவரை ஜென்ம ராசியில் இருந்த குரு பகவான் இரண்டாம் இடமான கன்னி ராசிக்கு 2-8-2016 ல் மாறிவிட்டார் ..குரு ஜென்மத்தில் இருந்த போது
இந்த ராசி அன்பர்களுக்கு அவ்வளவு நன்மை செய்யவில்லை , காரணம் ராகு சேர்க்கையால் ... ..சிம்ம ராசி அன்பர்களுக்கு குரு பகவான் 5க்கும் எட்டுக்கும்
அதிபதியாவர். இவர் சிம்ம ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கு வந்து நன்மைகளை செய்யவிருக்கிறார்.
இதுவரை பண தட்டுபாடு இருந்தது மறையும் .. தாராளமான பண
வரவுகள் இருக்கும்..
உங்கள் பேச்சு சபை ஏறும் .. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் .. திருமண தடை ஏற்பட்டிருக்கும் அன்பர்களுக்கு  இந்த வருடம் திருமணம் நடந்து குடும்பம் அமைய குரு பகவான் வழி செய்வார்.
பள்ளி பருவ மாணவர்களுக்கு கல்வி நன்றாக வரும் ,, நல்ல மதிப்பெண்கள்  பெறுவார்கள் ..இந்த ராசி ஜோதிட அன்பர்களுக்கு குரு புதன் வீட்டுக்கு வருவதால் வாக்கு பலிதம் உண்டாகும் ..

இனி குருவின் பார்வை பலம் பார்க்கலாம் .. சிம்ம ராசியின் 6ஆம் வீட்டை குரு தன் 5 ஆம் பார்வையாக பார்கிறார் . மேலும் கோசாரத்தில் சனி தன் 3 ஆம் பார்வையாக நாலாம் வீட்டிலிருந்து 6 ஆம் வீட்டை  பார்பதால்  வீடு வாங்க , வீடு கட்ட கடன் வாங்க வேண்டிவரும் ., மேலும் ஒரு சிலருக்கு
நிலம் , மனை வாங்ககும் யோகம் ஏற்படும் .  ஒரு சிலர் குடும்ப செலவுகளுக்காக கடன் வாங்குவர் .. சிலர்  குழந்தைகளின் கல்விக்கு கடன் வாங்குவர் .. எப்படியோ ,பணம் வரும் .. சிம்ம ராசியில் உள்ள வயதானவர்கள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்வது நன்மை பயக்கும்.


















அடுத்து  குரு பகவன் தன் 7 ஆம் பார்வையாக சிம்ம ராசியின் எட்டாம்
வீட்டை பார்வை செய்வார். கோர்ட் வழக்கு, சண்டை சச்சரவு இருந்தால்
அவை சுமுகமாக தீரும் .


முன்பு செய்த முதலீடுகளுக்கு தற்போது நல்ல பலன் குருவருளால் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும்... எதிர்பாராத பண வரவு இருக்கும்..

அடுத்து  குரு தன் 9 ஆம் பார்வையாக சிம்ம ராசியின் 1௦ ஆம் வீட்டை பார்கிறார் . இதுவரை அஷ்டம சனியால் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகும்
வேலையில் இருபவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும் ,,சம்பளம் கூடும்
வேலை இல்லதவர்களுக்கு வேலை கிடைக்கும் .. வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் ,,வியாபார முனேற்றம், தொழில் முன்னேற்றம்  போன்றவை
நல்ல விதமாக நடக்கும் .இதனால் நல்ல வருமானம் கிடைக்கும் ,, இந்த ராசி அன்பர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும்  வெற்றி பெரும் .


பரிகாரம்:
 ஏழை குழந்தைகளுக்கு  கல்வி கட்டணம்  கட்டி உதவி செய்வது .
வயதான வர்களுக்கு  உதவுவது ,, அருகில் உள்ள சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்தி வழிபாடு சிறந்தது

==============================================================================























கன்னி ராசி :

குருபகவான்  கன்னி ராசிக்கு பன்னிரெண்டாம் வீடான சிம்மத்திலிருந்து
விரயங்களையும் , ஏமாற்றங்களையும் கொடுத்துவந்தார் . 2-8-2016 முதல்
ஜென்மரசியான கன்னிக்கே மாறி விட்டார். உத்திர நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார் .  பொதுவாக ஜென்ம குரு
நன்மை செய்யாது என்பது ஜோதிட பழமொழி .. ..ஆனால் குருவுக்கு  இந்த வீடு ஒருவிதத்தில் நட்பு வீடு என்பதால்  நன்மைகளை எதிர்பார்கலாம்
ஜென்மத்தில் குரு வரும் பொது மன குழப்பம் அதிகமாக இருக்கும்.
ஜென்மத்தில் குரு வந்தபோதுதான் ஸ்ரீராமர் வனவாசம் சென்றார் .. அதுபோல்
ஒரு சிலருக்கு  அவர்கள் இருக்கும் ,வசிக்கும் இடத்தை விட்டு வெளியூருக்கு
அல்லது வெளி நாடுகளுக்கு சென்று பொருள் ஈட்ட , அல்லது வழ வேண்டும்
என்பது விதி .

அடுத்து குருவின் பார்வை பலனை பாப்போம்.
கன்னி ராசியின் 5ஆம் வீடான மகரம், 7ஆம் வீடான மீனம் மற்றும்
9 ஆம் வீடான ரிஷபம் ஆகிய வீடுகளை குரு பார்வை செய்வார். குருபகவான் தான் இருக்கும் இடத்து பலனை விட பார்க்கும் இடதுக்கு
பலம் சேர்ப்பார்.  அதன்படி  5 ஆம் பார்வையாக சனிபகவான் வீடான மகரத்தை பார்ப்பார் , கோசாரத்தில் சனியும் 3 ஆம் பார்வையாகதன் சொந்த வீட்டை  பார்கிறார் 5 ஆம் வீடு பூர்வ புண்ணியஸ்தானம் , இதனால் குலதெய்வ வழிபாடு, சித்தர் வழிபாடு போன்றவற்றை  ஒரு சிலர் அனுபவிப்பார்கள் . ஜனவரி மாதத்திற்கு  பிறகு இளைய பருவத்தினருக்கு மேற்கல்வி பயில ஆர்வம் உண்டாகும் ,அவை தடை இல்லாமல் இடம் கிடைக்கும் .திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு  அந்த பாக்கியம்
ஏற்படும். ஒரு சிலர் காதலித்து கொண்டு இருந்தவரையே பெற்றோர் சம்மதத்தோடு  திருமணம் செய்வார்கள் .


அடுத்து குரு பகவான் 7 ஆம் பார்வையாக கன்னி ராசிக்கு 7 ஆம் இடமான
மீனத்தை  பார்கிறார்.
இதன் பலனாக கன்னி ராசி அன்பர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும்
வரும் தை மதத்திற்கு மேல் கெட்டி மேளம் கொட்டிவிடும் .அதாவது திருமணம் நடந்து விடும் .

செய்துவரும் தொழில், வியாபாரம் அமோகமாக நடக்கும் .. வேலையில் உள்ளவர்களுக்கு தடைபட்டு கொண்டிருந்த பதவி உயர்வு ,இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும் ..இதனால் வாழ்க்கை தரம் உயரும்.
இவர்களுடன் வேலை செய்பவர்கள் இந்த ராசி அன்பர்களின் யோசனைகளை
மதித்து கேட்பார்கள் , வேலையில் திருப்தி இருக்கும் ..ஆனால் நிறைய நேரம் வேலையில் செலவிடவேண்டி இருக்கும்.
கூட்டு வியாபாரம் ,நல்ல முன்னேற்றம் அடையும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்.
ஒரு சிலர் வேலையில்  விரும்பிய இடமாற்றத்தை  கிடைக்க பெறுவார்கள் .
அதனால் புதிய மனிதர்களை சந்திப்பார்கள் , மாற்றங்களை ஏற்று மேன்மை பெறுவார்.

அடுத்து குருவின் 9 ஆம் பார்வை , ரிஷபத்துக்கு  விழுகிறது .
இது கன்னிக்கு 9 ஆம் வீடு .அப்பாவின் உடல் நிலை நன்றாக இருக்கும் .
அவருடன் சுமுக உறவு இருந்துவரும் . அப்பா வழி சொந்தங்களுடன் நல்லிணக்கம் உண்டாகும் . பூர்விக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகி  வருமானம் வர வழி பிறக்கும் . ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் ,, ஜனவரிக்கு மேல் இது கிடைக்கும் .. ஒரு சிலர் புனித யாத்திரை செல்வார்கள் .. குரு ஸ்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு .அவர்களின் ஆசியும் கிடைக்கும் ..
ஜென்ம குருவால் மறதி.உண்டாகும்  கைபேசி, வாகன சாவி போன்றவற்றை
மறந்து எங்காவது வைத்துவிட்டு தேடும் நிலை ஏற்படும் ..மனக்குழப்பம் உண்டாகும் .டென்ஷன் உண்டாகும் .. கவனம் தேவை..
பரிகாரம்:   சாதுக்களுக்கு உதவ வேண்டும் , அன்னதானம் செய்தல் நலம் ...




துலாம் ராசி :


இதுவரை துலா ராசிக்கு 11 ஆம் இடத்திலிருந்து ஒரு சில நல்ல பலன்களை
செய்துவந்த குரு பகவான், 2-8-2016 அன்று  கன்னி ராசிக்கு மாறி உள்ளார்
இது துலா  ராசிக்கு 12 ஆம் இடமாகும் ..
இது துலா ராசிக்கு , துலா லக்னத்துக்கு குரு , 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு அதிபதியாக வரும் குரு பகவான் நல்லது செய்ய மாட்டார் , இவர் 12 ஆம்
வீட்டில் மறைவது ஒரு விதத்தில் நன்மையே..

12 ஆம் வீட்டின் பலன்கள் பதிப்பினை தராது எனலாம் . இது விரைய ஸ்தானம் என்பதாலும், குரு இயற்கை சுபர் என்பதாலும் , சுப செலவுகளை தருவார்.






துலா  ராசியின் நாலாவது ராசியை குரு பார்ப்பதால் , வீடு கட்டுவது, வாங்குவது போன்ற நல்ல செலவுகள் செய்ய வேண்டி வரும். ஒரு சிலர் வண்டி வாகனங்களுக்காக செலவு செய்யலாம் .. ஒரு சிலர் கல்வி செலவுகள் செய்வார்கள் .. உயர் படிப்புக்கு கடன் வாங்கி படிப்பார்கள் .
வெளிநாடுகளுக்கு சென்றும் சிலர் படிக்க சந்தர்ப்பம் கூடி வரும்.

அடுத்து  குரு பகவான் 7வது பார்வையாக துலா ராசியின் 6 வது வீட்டை
பார்பார்.  இதன் பலனாக , புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும் ,
ஒரு சிலர் பழைய கடனை அடைத்து  புதிய கடனை பெறுவார்கள்
உடல் நலம் பாதிக்க பட்ட துலாராசி  அன்பர்கள் தகுந்த மருத்துவ பரிசோதனை எடுத்துகொண்டால் நலம் . ஒரு சிலருக்கு வயிற்று வலி வர வாய்புள்ளது . ..
அடுத்து குரு தன் 9 ஆம் பார்வையாக துலாரசியின்  எட்டாம் இடத்தை
பார்கிறார் .. ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும் .
வழக்குகள் இருந்தால் அவை குரு பார்வையால் சரியாகும் .வரவேண்டிய  பணம்  வந்து விடும் . அரசு வேலையில் இருந்து ரிடயர் ஆகி இருப்பவர்களுக்கு வரவேண்டிய ஒய்வு கால பணம் எல்லாம் வந்து விடும் .
பணிபுரியும் தொழிலாளர்கள்  அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம் .. வேலை பளு அதிகமாக  இருக்கும் .ஒரு சிலர் வேலை காரணமாக கணவன் –மனைவி  பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் ...
துலா ராசி அன்பர்கள் இந்த குரு பெயர்ச்சியில் ,  குருபகவானின்  பார்வை பலத்தால் ஒரு சில நன்மைகளை பெறுவார்கள் ..
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு  நல்ல திருப்பதை உங்கள் வாழ்வில் கொடுக்கும்.. ஏழரை சனி காலம் நடப்பதால் ஒரு முறை திருநள்ளார் சென்று சனிபரிகரம் செய்வது சிறந்தது .. முடவர்களுக்கு அதிகம் உதவுங்கள் ,,,



















விருச்சிக ராசி :


இதுவரை 1௦ ஆம் வீட்டில் இருந்த குருபகவான்  11 ஆம் இடமான கன்னிக்கு மாறுகிறார் .. ஏழரை சனியின் கடுமையான பலன்களும் குருவின் பத்தாம் வீடு பலன்களும் இந்த ராசி அன்பர்களுக்கு மன அழுத்தத்தையும்  சோர்வையும் கொடுத்திருக்கலாம் இவை இந்த குருபெயர்சியின் காரணமாக கொஞ்சம் விலகும்.
ஏழரை சனியின் இரண்டாவது சுற்றாக உள்ளவர்களுக்கு இந்த குருபயற்சி நல்ல அனுபவங்களையும் ,வெற்றிகளையும் தரும் ..சனியின் முதல் சுற்று , மற்றும் மூன்றாவது சுற்றில் இருப்பவர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி நல்ல ஆறுதலை தரும் என்பதில் மிகையில்லை. .. விருச்சிக அன்பர்களுக்கு குருவானவர் 2, மற்றும் 5 ஆம்
வீடுகளுக்கு அதிபதி ஆவார் .. அவர் 11 ஆம் வீட்டில் அமர்வது ஒரு யோகமே .

நீண்ட காலமாக நீங்கள் போட்ட திட்டங்கள் செயல் வடிவம் பெறும். சென்ற ஆண்டில் ஏற்பட்ட தொழிலின் பின்னடைவு , ஏமாற்றங்கள், போன்றவை தற்போது
மாறும் . பணியாளர்களுக்கு இருந்த வேலையின் தேக்க நிலை மாறும் ,,இந்த வருடம் பதவி உயர்வு , சந்தோஷமான சம்பள உயர்வு, போன்றவை கிடைக்கும்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கு  தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்

இனி குருவின் 5 ஆம் பார்வை 3 ஆம் வீடான மகரதில் விழுகிறது . இதனால் மனதில் ஒரு நம்பிக்கை, தைரியம் பிறக்கும் , எந்த வேலையையும் எடுத்து முற்சி செய்து வெற்றகரமாக முடிப்பீர்கள் . வேலை நிமித்தமாக அடிக்கடி சிறு பயணங்கள்
செய்வீர்கள் . குருவின் பார்வை 3 ஆம் வீட்டுக்கு படுவதால் இளைய சகோதரர் உறவு பலப்படும். அவர் மூலம் உங்களுக்கு நிறைய லாபங்கள் கிடைக்கும். சனி பகவானும் 3 ஆம் பார்வையாக உங்கள் 3 ஆம் இடத்தை பார்ப்பதால் குருவின் அருள் சிறிது தடை படலாம் .. அவை ஜனவரி ௧௭ ஆம் தேதி வரை இருக்கும்
அதன் பிறகு எல்லாம் வெற்றி தான் ..

அடுத்து குருவின் 7 ஆம் பார்வை உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டுக்கு,அதாவது   ,குருவின் சொந்த வீட்டுக்கு விழுகிறது ..இது இன்னும் சிறப்பு. பூர்வ புண்ணியம் பலப்படும். நீங்கள் செய்த புண்ணிய கர்மாவின் பலன்கள் தற்போது நல்ல பலன்களை தரும் . ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் .சிலருக்கு ஆடை,ஆபரணங்கள் சேரும் . தங்க நகை வாங்குவீர்கள். திருமணமாகி குழந்தை உள்ளவர்கள் அவர்களின் வளர்ச்சி, கண்டு மகிழ்வீர்கள். .குழதைகளின் உடல் நல குறைபாடு இருந்தால் அவை குருவின் அருளால் சீராகும் . இதுவரை இருந்த பண கஷ்டங்கள் தீரும் , பணம் உங்கள் பையை நிரப்பும் ..நீண்டகால சேமிப்புகள் தொடங்குவீர்கள் .. குழதைகளின் கல்விக்கு சேமிப்பீர்கள் .



அடுத்து குருவின் 9 ஆம் பார்வை உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டுக்கு விழுகிறது.
இதனால் இவர்களின் கணவன் / மனைவி நிலை நன்றாக இருக்கும்.
சமுதாயத்தில் நல்ல மதிப்பு உண்டாகும் . நண்பர்கள் உதவுவார்கள் .நண்பர்களின் உறவு நிலை மேம்படும் .. வியாபாரத்தில் உள்ளவர்களின் பங்குதாரர்கள் நல்ல
நட்புடன் இருப்பார்கள் . வியாபாரம் முன்னேற்றம் அடையும்.  ஒரு சில இளைய ராசி அன்பர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும் .குருவின் பார்வை ஏழாம் வீட்டில் படுவதால் திருமணம் நிச்சயமாகும் , நடக்கும் .

பொதுவாக எந்த ஒரு கிரகமும் 11 ஆம் வீட்டில் அமர்ந்தால் நல்ல பலன்களை செய்வார்கள் .. குரு சுப கிரகம் எனவே கூடுதல் நன்மை ஏற்படும்.
ஏழரை சனியும் ஜனவரி ௧௭ ஆம் தேதிக்கு பிறகு தனுசு ராசிக்கு பாத சனியாக
மாறுவார் . அவரால் உண்டாகும் தொல்லைகள் குருவருளால் சமாளிக்கப்படும் .
கவலை வேண்டாம் .. விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த ஒரு வருடம் பொன்னான நேரம் எனலாம் ..
பரிகாரம் :     ஏழரை சனி நடைபெறுவதால் இந்த ராசி அன்பர்கள் ஒரு முறை திருநள்ளார் தர்பாரன்நீஸ்வரர் கோவிலுக்கு சென்று மூலவரையும், அம்பாளையும் தரிசித்து , சனி பகவானையும் தரிசித்து வந்தால் சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்களை சமாளிக்கலாம் ..
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு செவ்வரளியில் அர்ச்சனை செய்வது நல்லது ..















  .









தனுசு ராசி :


தனுசு ராசிக்கு  இதுவரை 9 ஆம் வீட்டில் இருந்து வந்த குருபகவான் பல
நன்மைகளை செய்திருக்கலாம் . இருந்தாலும் ராகுவுடன் இணைந்ததால் அவரால் முழு நன்மைகளை கொடுத்திருக்க முடியாது . .இனி குருபகவான் உங்களின் 9 ஆம் ராசியில் இருந்து 1௦ ஆம் ராசிக்கு மாறுகிறார் .  பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது ஜோதிட பழமொழி . இது யாருக்கு பொருந்தும் எனில் , அரசியலில் உள்ளவர்களுக்கு ஓரளவு பொருந்தும் .. மிக உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு பொருந்தும் .. சாதாரண  மக்களுக்கு பொருந்தாது . . மேலும்  தனுசு ராசி அன்பர்களுக்கு ஏழரை  சனி காலம் ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகின்றன . இதுவரை குருவின் பார்வை ராசிக்கு இருந்ததால் சனியின் தாக்கம் அவ்வளவு பாதிப்பை தரவில்லை .. இனி ராசிக்கு குருபார்வை இல்லை என்று பயப்படவேண்டாம் .. வேறு அசுப கிரக பார்வையும் இல்லை . எனவே பதிப்புகள் ஏற்படாது . குருவே உங்கள் ராசியின் அதிபதி ,அவர் 1௦ இல் அமர்ந்தால் ஒன்றும் பயப்பட தேவை இல்லை பதவியில், வேலையில் எந்த பாதிப்பும் வராது .

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்துக்கு பலம் உண்டாகும் ..
குருவின் பார்வை தனுசு ராசி அன்பர்களின்  2,, 4, 6 ஆம் வீடுகளுக்கு  ஏற்படும்
பத்தாமிடத்தில் குரு அமர்வது ஒரு வகையில் சில கஷ்டங்களை தரும்.
வேலையில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களுடன்  கவனமாக பழகவும்
ஆசை காட்டி வேலை வாங்கி மோசம் செய்வார்கள் ..சனி பகவானின் பலன்களும் நன்றாக இல்லை எனவே கவனம் தேவை. வியாபாரத்தில் உள்ளவர்களும் அதிக விரிவாக்கம் செய்ய வேண்டாம் ,, பணம் கொடுக்கல், வாங்கலில் அகலக்கால் வைக்க வேண்டாம் .

குரு பகவான் தன்னுடைய 5 ஆம் பார்வையாக 2 ஆம் வீட்டை பார்ப்பதால் , பண வரவு நன்றாக இருக்கும்,  கணவன் – மனைவி  மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
குடும்பம் சந்தோஷமாக இருக்கும் . நீங்கள் கூறும் கருத்துக்களை மற்றவர்கள் கேட்பார்கள் . வாக்கு பலிதம் இருக்கும் . குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் .


அடுத்து குரு பகவான் தனது 7 ஆம் பார்வையாக தனுசுவின் நாலாம்  ஆம் வீட்டை
பார்கிறார். இதன் பலனாக பழைய வாகனத்தை விற்று ,புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் புதிய கார் , பைக் , போன்ற வாகனங்கள் வாங்குவர். அதற்கு கடன் உடன் கிடைக்கும் . அம்மாவின் உடல் நலம் மிக நன்றாக இருக்கும் .
மாணவ பருவத்தில் இருப்பவர்களுக்கு , படிப்பு நன்றாக வரும், கல்வி தொகை கிடைக்கும். , கல்லூரியில் படிப்பர்களுக்கு நல்ல வேலைக்கு செல்ல உறுதி அளிக்கப்படும்.
அடுத்து குரு பகவானின் 9 ஆம் பார்வை தனுசுவின் 6 ஆம் வீட்டுக்கு விழும் .
இந்த ராசி அன்பர்களுக்கு எதாவது உடல் நலமின்மை இருப்பவர்கள் தகுந்த
மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் . அதற்கு தகுந்த மருந்து எடுத்துகொள்வது நலம் பயக்கும்.
வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும்  வாங்குவீர்கள் .. ஒரு சிலர் கல்வி கடன்
வாங்குவீர்கள் . பூர்விக சொத்துகளில் வழக்குகள் இருந்தால் அவை குரு பார்வையால் கட்டுக்குள் இருக்கும் . ஏனெனில் சனியும் 6 ஆம் வீட்டை பார்பதால் ,கொஞ்சம் இழுபறியாக இருக்கும் .
ஒருசிலருக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் குறைந்து ,தொழில் சீராகும்.
ஒரு சிலர் அப்பாவின் தொழிலையே செய்ய கூடும். அது தற்போது  முன்னேற்றம்
அடையும்.

பரிகாரம்:
ஏழரை சனியின் பிடியில் உங்கள் ராசி இருப்பதால் , ஒருமுறை திருநள்ளார் சென்று
சனி பகவானுக்கு பரிகாரம் செய்தால் நன்மையே.
வியாழக்கிழமை  தக்ஷ்ணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வரவும் ..































மகரம் ராசி   :

இதுவரை அஷ்டமத்தில் இருந்த குரு பகவான் இனி உங்கள் ராசியின் 9 ஆம்
வீட்டிற்கு மாறுகிறார் . சென்ற வருடம்  பல கஷ்டங்களை பார்த்திருப்பீர்கள் .
அவை இனி விலகும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3, மற்றும் 12 இடத்திற்கு அதிபதியாவார் . அவர்
உங்கள் ராசிக்கு 9 இல் அமர்வது நல்லதே .மேலும் அவர் உங்கள் ராசியை 5 ஆம் பார்வையாக பார்ப்பார்.  பிறகு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டை
பார்ப்பார் . பிறகு 9 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தை பார்ப்பார் .

இயற்கை சுபரான குரு பகவான்  உங்கள் ராசியின் 9 ஆம் வீடான கன்னியில் அமர்வது சிறப்பு.. இந்த ராசி அன்பர்களில் நடுத்தர  வயதினர் அதிக நன்மைகளை
பெறுவார்கள். இந்த ராசி அன்பர்களின் உடல் நலம் இனி நன்றாக இருக்கும் . சென்ற வருடம் ஒரு சில உடல் உபாதைகள் இருந்திருக்கும்.அவையாவும் இனி சீராகும்.
மனதில் நல்ல புத்துணர்வு ஏற்படும் .இந்த ராசி கலைஞர்களுக்கு, மீடியா தொழிலாளர்களுக்கு நல்ல நேரம் .. இவர்களின் புகழ் , ஓங்கும் . நல்ல
வாய்புக்கள் கிடைக்கும். தகவல் துறை, கணினி துறை ,ஏஜென்சி வியாபாரம் , கமிஷன் வியாபாரம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு ஏற்றம் இருக்கும் .


குருவின் 5 ஆம் பார்வை உங்கள் ராசியிலேயே விழுவதால் , உங்கள் மனம், தேக ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும் . நல்ல எண்ணங்கள் , முயற்சிகள் இருக்கும்.
இதனால் பலனாக எல்லா வேலைகளிலும் வெற்றி உண்டாகும் . அதிர்ஷ்ட தேவதை
உடன் வருவாள் . நீங்கள் விரும்பியது நடக்கும்.

அடுத்து குரு பகவான் தனது 7 வது பார்வையாக உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டைப் பார்ப்பார் . இந்த இடம் தைரிய ஸ்தானம், முயற்சி ஸ்தானம் , வீரியம் , வெற்றி ஸ்தானம், மற்றும் இளைய சகோதர ஸ்தானம் .இது குருவின் வீடாகும் . தனது வீட்டையே பார்ப்பதால் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.. 3 ஆம் இடம்  கர்ணபூஷன இடம் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள்.
இதன் பயனாக இப்போது நீங்கள் தங்க நகை வாங்குவீர்கள் .அதற்கு குருவரு செய்வார் .ஒரு சிலர் உல்லாச பயணம் சென்று வருவார்கள் .
ஒருசிலர் தனது தம்பி , தங்கைகளுக்காக, பரிசுகள் வாங்குவீர்கள்,
அவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் ,..ஒருசிலரின் மாமனார், அவர் வீட்டு உறவுகள் பலப்படும். அவர்களால் பயன் பெறுவார். ஒருசிலர் உயர் ரக செல் போன் வாங்குவீர்கள் ..




அடுத்து குருபகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீடான ரிஷபத்தை தனது
9  ஆம் பார்வையாக   பார்கிறார் ..இந்த இடம் உங்கள் ராசியின் பூர்வ புண்ணியஸ்தானம் , ,முன் வினைகள் அதன் பயன்களை இந்த பிறவியில்
அனுபவிப்பது. இந்த இடத்தை குரு பார்ப்பதால் நல்ல பலன்களே நடக்கும்.
நீங்கள் நினைத்தது நடக்கும். இந்த ராசி அன்பர்கள் ஒரு சிலருக்கு திருமணமாகி குழந்தை பிறக்காமல் இருந்தால் இப்போது அந்த பாக்கியம் கிடைக்கும் .
மகன், மகள் விஷயத்தில் இருந்த மன கவலைகள் விலகும். அவர்களும் பெற்றோர்
பேச்சை கேட்டு நடப்பார்கள் . வியாபாரிகளுக்கு போட்டிகள் இருக்கும், ஆனால் சீரான வருமானம் இருக்கும்
ஒரு சில மகர ராசி அன்பர்கள் தாத்தா, பாட்டி  ஆவார்கள் ,
பேரனையோ . பேத்தியையோ கொஞ்சும் நேரம் வந்துள்ளது அதற்கு குரு பகவான்
அருள் செய்வார்  ஒரு சிலருக்கு கடன் தொல்லை இருக்கும் .அவை யாவும்
தற்போது நீங்கும் .

ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நின்றிருந்தால் அவை  இப்போது குருவருளால் நல்ல விதமாக முடிந்து விடும் . ஒரு சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் வரும் ..

பரிகாரம்:

குல தெய்வ வழிபாடு சிறந்தது . ஒருமுறை திருசெந்தூர் செந்தில் ஆண்டவனை தரிசனம் செய்து வந்தால் எல்லாம் நன்மையாக முடியும்

























கும்பம் ராசி .:


இதுவரை  கும்ப ராசிக்கு  7 ஆம் இடத்தில இருந்த குரு பகவான் நல்ல பலன்களை
கொடுத்து வந்தார் . இனி அவர் எட்டமிடமான கன்னிக்கு மாறிவிட்டார் ..பொதுவாக
எட்டாம் இடம் குருவுக்கு நல்ல இடம் இல்லை . மறைவு ஸ்தானம் . அதுவும் கும்ப ராசிக்கு குரு இரண்டு, மற்றும் பதினொன்றாம் இடத்துக்கு அதிபதி .இரண்டுமே நல்ல ஆதிபத்தியம் பெற்றவை. .. அவர் அஷ்டமத்தில் அமர்வது நல்ல பலன்களை சொல்ல முடியவில்லை..  எனினும்  குருவின் பார்வை கும்ப ராசியின் இரண்டு, நான்கு, மற்றும் 12 ஆம் வீடுகளுக்கு படுகிறது
கன்னி குருவிற்கு நட்பு வீடு . எனவே அவ்வளவு கஷ்டத்தை குரு தர மாட்டார் .
எட்டில் அமரும் குரு , கும்ப ரசி அன்பர்களுக்கு திடீர் அதிர்டங்களை தருவார்
ஒரு சிலருக்கு வீடு மாற்றம், வேலையில் இட மாற்றம் உண்டாகலாம் .


அடுத்து குருவின் 5 ஆம் பார்வை உங்கள் ராசியின் 12 வது வீட்டில் படுகிறது.
ஒரு சிலர் தாங்கள் இருக்கும் இருப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று
பிழைக்க வேண்டும் .இதனால் நிறைய செலவுகள் ஏற்படும்.  ஒரு சிலருக்கு
அவர்களின் மகன் அல்லது மகள் திருமண செலவுகள் ஏற்படும்.  ஒருசிலர்
வீடு , வாகனம் பராமரிப்பு செலவுகள் செய்ய வேண்டி வரும் .. ஒரு சிலர்
புதிய வீடு வாங்குவார்கள் .

அடுத்து குருவின் 7 ஆம் பார்வை உங்களின் 2 ஆம் வீடான மீனதிர்க்கு விழும்
இது குருவின் சொந்த வீடு என்பதால் பலன்கள் மிக நன்றாக இருக்கும்.
குழந்தைகளின் கல்வி மேம்படும் . குடும்பத்திற்கு பணம் வந்து கொண்டு இருக்கும் . தட்டுபாடு இருக்காது .  ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் என்று சொல்வார்களே அதுபோல் எதிர்பாராமல் ஒரு பெரிய தொகை கிடைக்க வாய்ப்புள்ளது . எல்லா சுப விரயங்களையும் சமாளிக்க பணம் வரும் . கவலை வேண்டாம் .
ஜோதிடம் , வக்கீல் போன்ற வேலையில் உள்ளவர்களுக்கு வாக்கு பலிதம்
உண்டாகும் . மேலும்  குரு எட்டாம் வீட்டில் அமர்துந்துள்ளதால் சிறை காவலர், அதிகாரிகள் , நீதித்துறையில்  உள்ளவர்களுக்கும் நல்ல நேரமே ..

அடுத்து  குருவின் 9ஆம் பார்வை கும்ப ராசியின்  4 ஆம் வீட்டில் விழுகிறது .
இதன் பலனாக வீடு , மனை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.
பூர்விக சொத்துக்கள் இருந்தால் அவைகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும்

குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் இருக்கும் , ஒரு சிலர் தீர்த்த யாத்திரை செல்ல சந்தர்ப்பம் கூடி வரும் .. வியாபாரிகளுக்கு   நல்ல முன்னேற்றம் இருக்கும்
ஆனால் தீவிர முயற்சி இருந்தால்தான் இந்த நல்ல பலன்கள் நடக்கும்
பொதுவாக கும்பராசி அன்பர்களில் உள்ள அரசியல் , காவல் துறை , நீதித்துறை
மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கும் நன்மையே நடக்கும்
நீண்ட நாட்களாக குல தெய்வ வழிபாடு விட்டுப்போனவர்கள் இந்த வருடம் அதை நிறைவேற்றுவீர்கள் ..

எட்டில் குரு , ஏழில் ராகு , இருப்பதால் முறையான பரிகாரங்கள் செய்வது நலம்
ராகு , கேது பரிகாரம் செய்வது நல்லது .  குரு பரிகாரம் , சித்தர் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தால் நன்மை உண்டாகும்




:





































மீன ராசி:

மீனா ராசிக்கு குரு பகவான் இதுவரை 6 ஆம் இடமான  சிம்மத்தில் இருந்தார் . அவருடன் ராகுவும் இணைந்து பல இன்னல்களை தந்திருக்கலாம் . ஏனெனில்
ராசியாதிபதி  6 இல் மறைந்ததும், ராகுவோடு இணைந்ததும் ஒரு குறையே.
ஆனால் இந்த குருவானவர் 2- 8 – 2016 அன்று சிம்மராசியில் இருந்து உங்கள் ராசியின் 7 ஆம் வீடான கன்னிக்கு மாறிவிட்டார் . கன்னி வீடு  குருவுக்கு நட்பு வீடு. .
7 இல் இருக்கும் குரு இந்த வருடம் மீன ராசி அன்பர்களுக்கு பல நன்மைகளை
செய்யவிருக்கிறார் . மேலும் குருபகவான்  மீன ராசிக்கு 1 , 3, 11 ஆம் வீடுகளை
பார்வை செய்வார் . .குரு பகவான் தன சொந்த வீட்டையே பார்ப்பதால் இதுநாள்வரை இருந்த  கஷ்டங்கள் மறையும்.  பொருளாதார முன்னேற்றம்
இருக்கும். .சுறுசுறுப்பு, அதிக முயற்சி என்று ரொம்ப பிஸியகிவிடுவீர்கள்.

வியாபாரம் செய்பவர்கள் நிறைய லாபத்தை எதிர்பார்க்கலாம் . மன நிம்மதி,
உடல் ஆரோக்கியம்  சிறந்து விளங்கும்.  உங்கள் பிள்ளைகளால்  பெருமை
புகழ் உண்டாகும. அரசாங்க தடைகள் விலகும்.  மிகவும் ஏற்றமான வருடமாகஇந்த வருடம் மீனராசிக்கு இருக்குமென்பதில் சந்தேகமில்லை .

இனி குருவின் 5 ஆம் பார்வை மீன ராசியின் 11 ஆம் வீட்டுக்கு விழுவதால் உங்கள்
குழந்தைகளால் பெருமை , புகழ் உண்டாகும் . செய்யும் தொழிலில் நிறைய லாபம்
கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும்..  மூத்த சகோதரம், பெரியப்பா வீட்டாருடன்
நல்ல உறவு ஏற்பட்டு சந்தோஷம் அடைவீர்கள் . உங்கள் முயற்ச்சிகள் யாவும்
வெற்றி பெரும் . தொழில் அதிபர்கள், வியாபாரிகள் , அதை விரிவு படுத்துவார்கள்
இரும்பு வர்த்தகம், ரோடு காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வழி உண்டு .
அரசு பணியாளர்கள், தனியார் துறை பணியாளர்கள் எல்லோரும் மேலாளர்களின் கெடுபிடியிலிருந்து  விடுபட்டு நிம்மதியாக இருப்பார்கள். அதனால் ஊக்கமாக வேலை செய்வார்கள், அவர்களின் ஊதியமும் உயரும்.

அடுத்து குருவின் 7 ஆம் பார்வை மீனராசிக்கே விழுவதால், இந்த ராசி அன்பர்கள்
உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தேக ஆரோகியத்தில் குறைபாடுகள் இருந்தால்
அவை சீக்கிரம் குணமாகும் . ராசிக்கு 7 இல் குரு அமர்வதால் மனைவி அல்லது கணவருடன்  இதுவரை இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் அகலும் . மிக அன்னியோன்மாக இனி இருப்பார்கள் . நண்பர்கள், வியாபாரத்தில் உள்ள பங்குதாரர்கள் ஆகியோரால் நன்மைகள் பல உண்டு,
ஒரு சிலருக்கு நீண்ட தூர பயணங்கள்  செல்லும் சந்தர்ப்பம் வரும்.
ஒரு சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும் .



அடுத்து குருபகவான் தனது 9 ஆம் பார்வையாக மீன ராசியின் 3 ஆம் வீட்டை
பார்கிறார் ,
இதன் பலனாக இந்த ராசி அன்பர்கள் எந்த செயல்களில் முயன்றாலும் வெற்றி கிடைக்கும். தம்பி தங்கைகள் மூலம் நல்ல லாபங்கள் கிடைக்கும் .
புதிய தொழில் தொடங்க சரியான நேரம். ஒரு சிலருக்கு , படிப்புக்ககவோ , வேலை விஷயமாகவோ வெளிநாடு போக சந்தர்ப்பம் கூடிவரும்.
ஆடை , ஆபரண சேர்க்கை உண்டாகும் . சொத்து வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு
உண்டாகும் வீடு , வாங்கும் யோகம் , இது நவம்பர் மாதத்திற்கு பிறகு உண்டாகும்

பொதுவில் இந்த குருப்பெயர்ச்சி மீன ராசி அன்பர்களுக்கு ஒரு வரப்ரசாதம் என்றே சொல்லலாம் ..

பரிகாரம்:

குடும்பத்துடன் ஒருமுறை குரு பகவான் திருத்தலமான ஆலங்குடி சென்று
அங்குள்ள தெய்வங்களை வணங்கி தக்ஷிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வர
பல யோகங்கள் கிடைக்கும்

.


பின் குறிப்பு:  இங்கு சொல்லப்பட்ட குருப்பெயர்ச்சி பலன்கள் எல்லா ராசிக்கும்
பொதுவானவை. தனிப்பட்ட ஜாதகரின் தசா  , புக்தி , அந்தரம் பொறுத்து பலன்கள்
இருக்கும் .
அன்புடன்
Astro . E N SANKARAN
9962014793


















            “ஸ்ரீ குருப்யோ நமஹ”


குருப்பெயர்ச்சி பலன்கள் 02-08-2016  TO 02-09-2017



குருப்பெயர்ச்சி பலன்கள்  ..துர்முகி வருடம்  ஆடி மாதம் பதினெட்டாம் நாள்
ஆங்கில வருடம் .ஆகஸ்டு 2ஆம் தேதி 2௦16 வருடம்  குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து  கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் ...

பொதுவாக குரு பகவான் ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆம் வீடுகளில் பயணிக்கும் போது அந்த ராசிக்கு நன்மைகள் அதிகம் நடக்கும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன .  நவ கிரகங்களில் குரு பகவான் மட்டுமே முழு சுபர் .. இவரின் காரகங்கள் புத்திர பாக்கியம் தருவது, நல்ல கல்வி ஞானம் தருவது , திருமண தடைகளை விலக்குவது , பண வருவாயை அதிகரிப்பது போன்றவையாகும் .., நல்ல குணங்களுக்கு அதிபதி குருவாகும் ., நேர்மையான சிந்தனை,, நல்ல கல்வி , உயர் படிப்பு , வங்கி வேலை , ஆசிரியர் வேலை போன்றவற்றிக்கும்  குருவே காரண கர்த்தா ....

குருவின் பார்வை பலம் இன்னும் நல்ல பலன்களை தரும்.  வேலை மாற்றம்,
வேலை விஷயமாக வெளிநாடு செல்லுதல் , மேல் படிப்புக்கு வெளிநாடு செல்லுதல் ,குடியுரிமை பெறுதல் , வீடு , மனை , நிலம் வாங்க குருபலம் அவசியம் , ஏனெனில் பணம் கிடைக்க குருவருள் வேண்டும் , வங்கி கடனாகவோ, வியாபார லாபமாகவோ பணம் வேண்டும் , சேமிப்புக்கும் குருவருள் வேண்டும் ,,, ஆக குரு பகவான் இருக்கும் வீட்டை விட பார்க்கும் வீடு பலப்படும் என்பது சோதிட விதி .

இனி இந்த குருபெயர்ச்சி  12 ராசி அன்பர்களுக்கும்  என்ன மாதிரியான பலனை செய்யபோகிறது என்பதனை பார்ப்போம் .. .















மேஷ ராசி :

      மேஷ ராசி அன்பர்களுக்கு  குரு பகவான் இதுவரை 5 ஆம் வீட்டிலிருந்து நன்மை செய்தார் .. இனி அவர் 6ஆம் வீடான கன்னி ராசிக்கு
செல்கிறார் .. காலபுருஷ தத்துவப்படி  கன்னிதான் ஆறாவது வீடு.
இது குருவிற்கு மறைவு வீடு .  மேஷத்திற்கு குரு 9,மற்றும் 12 ஆம்  வீடுகளுக்கு
அதிபதி .9 ஆம்  வீட்டு அதிபதி 6 இல் மறைவது சிறப்பல்ல .. எனினும் அவரின் பார்வை பலம் நன்மை செய்யும் . இவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஞாயமான நல்ல பலன்கள் , வாய்ப்புக்கள் தள்ளி போகும் ..
12ஆம் வீட்டு அதிபதி 6 இல் மறைவது ஒருவிதத்தில் நல்லதே.
அனாவசிய செலவுகள் இருக்கும் .. ஒருசிலர் குடும்பத்திற்காக கடன் வாங்கி
செலவு செய்ய நேரிடும் ,,சேமிப்புகள் கரையும் , எனவே நன்றாக யோசித்து
செலவு செய்ய வேண்டும் .வருமான குறைவு இருக்கும் ..சனியின் 7வது பார்வை மேஷ ராசியின் 2ஆம் வீட்டுக்கு விழுவதால் குருவின் 9ஆம் பார்வையினால் கிடைக்கும் நன்மைகள் தடைபடும் .. இது ஜனவரி மாதம்
17 தேதி வரை இருக்கும்  அதன் பிறகு நல்ல வருமானம் இருக்கும் ..
எதையும் சமாளிக்கலாம் ..

குருவின் பார்வை மேஷ ராசியின் 1௦ ஆம் வீடு , 12 ஆம் வீடு மற்றும் 2ஆம் வீடுகளுக்கு  விழுவதால் அந்த வீடுகள் பலப்படும் ..

குருவின் 5 ஆம் பார்வை ஜீவனவீட்டுக்கு  விழுவதால் , வேலை , வியாபாரம் , தொழில் விருத்தியாகும் ... ஆனால் வியாபாரமோ , வேலையோ தானே செய்யவேண்டும்  யாரையும் நம்பி விட்டு செல்வது  நன்மை பயக்காது .
பொதுவாக அரசியல் , கலை தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் .
அடிமை தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வுடன் நீண்ட தூர தேசங்களுக்கு சென்று பணி செய்யவேண்டி இருக்கலாம் .


அடுத்து குரு தனது 7 வது பார்வையாக மேஷ ராசியின் 12 வது வீட்டை

பார்கிறார் .. இதனால் ஒரு சிலருக்கு வெளி நாடு சென்று கஷ்டபட வேண்டி

இருக்கும் . குரு சுப கிரகம் . எனவே சுப செலவுகள் வாசலை தட்டும் ..

எனவே சேமிப்புகள் கரையும் ,, அத்தியாவசிய செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டி வரும் ,, கடன் அடைக்க நீண்ட நாட்களாகும் என்பதால் ,, கவனம் தேவை .








அடுத்து  குரு பகவான் தனது 9ஆம் பார்வையாக , மேஷ ராசியின் 2 வது வீட்டை
பார்கிறார் . இதனால் இந்த ராசிக் குழந்தையின் கல்வி  மேன்மை அடையும் .   தாராள  பண வரவு இருக்கும் . ஜனவரி மாதம் வரை பண வரவில் ஏற்ற இறக்கம் இருக்கும் . அதன் பிறகு நிலைமை சீராகும் .

பொதுவில் இந்த குருபெயர்ச்சி  மேஷ ராசி அன்பர்களுக்கு  சுமாராகத்தான் இருக்கும்  பரிகாரம் செய்து கொள்வது நல்லது .

வியாழகிழமை தோறும் ஒரு வருடத்திற்கு  தக்ஷிணாமூர்த்திக்கு நெய் தீபம்
ஏற்றி வழிபடவும் ..அதே போல் அஷ்டம சனி நடப்பதால் , சனீஸ்வரனுக்கு
எள் தீபம் ஏற்றி வழிபடவும் .. அல்லது சனிக்கிழமை ,ஹனுமார் கோவிலுக்கு சென்று வழிபடவும் .. அடுத்த குரு பெயர்ச்சி மிக சிறப்பாக இருக்கும் ,,


=====================================================================================

ரிஷப ராசி :



ரிஷப ராசிக்கு தற்காலம் குருபகவான் 4வது ராசியில் இருந்து  கொடுத்த பலன்கள் அவ்வளவு நன்மை செய்யவில்லை ,, ஆனால் தற்போது 5ஆம் இடமான கன்னி ராசிக்கு செல்வது சிறப்பு.  கன்னி ராசி குருவின் நட்பு வீடு ஆகும்.மேலும் புதன் வீட்டில் குரு , கல்விக்காரகனோடு சேர்ந்த குரு , நிபுணத்துவத்தை கொடுப்பார் ..அவர் பார்க்கும்  வீடுகள் பலப்படும் .
இதனால் ரிஷப ராசி அன்பர்கள் மிக நல்ல பலனை அடைவார்கள் . ஜனவரியில் சனி பகவான் ரிஷபத்திற்கு 8 க்கு வருவார் . ரிஷபத்திற்கு அஷ்டம சனி பெரிய தீமைகளை செய்யாது , ஏனெனில் ரிஷப ராசி அன்பர்களுக்கு சனி நல்லவர் ..
பொதுவாக ரிஷப ராசி , மற்றும் துலாராசி அன்பர்களுக்கு குரு நல்லவர் இல்லை ..அதிக நன்மைகளை செய்ய மாட்டார் .. ஆனால் குருவின் பார்வை
நன்மை செய்யும்.











குருவின் பார்வையான 5, 7, 9 ஆகிய பார்வைகள் ரிஷப ராசிக்கு 9, 11, மற்றும் ராசியில் விழும் .. இந்த மூன்று பார்வைகளுமே நல்ல வீடுகளுக்கு விழுவதால் , சிறப்பான பலன்களே நடக்கும்

இவர் 5 ஆம் பார்வையாக 9 ஆம் வீட்டை பார்பதால் தந்தை வழி உறவுகள்
பலப்படும் .பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அவைகள் மூலம் நல்ல வருமானம் இருக்கும் . தந்தையின் உடல் நிலை நன்றாக இருக்கும் . சிலர் வெளிநாடு சென்று  படிக்க முயன்றால் அவை வெற்றிகரமாக அமையும் .
வேலை விஷயமாகவும் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் , வயதானவர்கள் மகளின் /மகனின் வீட்டுக்கு வெளிநாடு செல்ல வேண்டி வரும் . ஒரு சிலர் குருமார்களை தரிசிக்க தீர்த்த யாத்திரை செல்வார்கள் .
அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும் .



அடுத்து குருவின் 7வது பார்வையால் ரிஷப ராசியின்  11 வது வீடான
மீன ராசிக்கு விழுகிறது .

இதன் பலன் இவர்களின் வியாபாரத்தில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்
வேலையில் இருப்பவர்களுக்கு  தன் உழைப்பால் நல்ல லாபம் கிடைக்கும்
முதலீடுகளாலும்  நல்ல லாபம் கிடைக்கும் .
மூத்த சகோதரம் இருந்தால் அவர்கள் நன்றாக இருப்பார்கள் . அவர்களால் இந்த ராசி அன்பர்களும் பயன் அடைவார்கள்
5ஆம் வீட்டில் குரு அமர்வதால் பூர்வ புண்ணியம் பலப்படும் .நீங்கள் செய்த புண்ணிய பலன்கள்  தற்போது நன்மை செய்யும் .,, தந்தை வழி சொத்து பிரச்சனைகள் இருந்தால்  நல்ல விதமாக முடிவுக்கு வரும் ...

அடுத்து குருவின் 9 வது பார்வை  ரிஷபத்தில் விழுவதால் . ராசி அன்பர்கள்
உடல் நல குறைபாடு இருந்தால்  நலம் பெறுவார்கள் .. சுறுசுறுப்பாக இருப்பார்கள்
இவர்களின் குழந்தைகளால் புகழ், மதிப்பு ,பெருமை போன்றவை கிடைக்கும்
ஒரு சிலர் தங்கள் மகன் அல்லது மகளின் திருமணம் நடக்க முயற்சிப்பார்கள் ,, அதுவும்  நல்லவிதமாக நடக்கும் ..ஒருசில வயதான ரிஷப ராசி அன்பர்கள் தாத்தா , பாட்டி  ஆக வாய்ப்புள்ளது .  ஒருசில ரிஷப
ராசி இளவயதினருக்கு திருமண யோகம் வருவதால் திருமணம் நடக்கும்

பரிகாரம் :  சனிக்கிழமைகளில் வெங்கடேச பெருமாள் வழிபாடும்,
 வியாழகிழமையில்  குருவின் வழிபாடும்  மேலும் சிறப்பான பலன்களை தரும் ..





மிதுன ராசி :

மிதுன ராசி அன்பர்களுக்கு , இதுவரை 3ஆம் வீட்டில் இருந்த குருபகவான்
2-8-2016 அன்று கன்னி ராசிக்கு மாறுகிறார் . இது உங்கள் ராசிக்கு நாலாவது
வீடு  ஆகும் . இதுவரை குருவால் நிறைய அலைச்சல்கள் , சிரமங்கள் , நிம்மதி இன்மை போன்றவைகள் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் .
அவை யாவும் மறைந்து நல்ல பலன்கள் நடக்க இருக்கிறது . மிதுன ராசிக்கு
குரு கேந்திர ராசிகளுக்கு அதிபதி ஆவார் .
ஒரு விதத்தில் பாதகாதிபதியும் ஆவர் .. ஆனால்  இவர் இன்னொரு கேந்திரத்தில் அமர்வது நன்மையே பயக்கும் .. ஒரு விதத்தில் குருவின் பார்வை பெரும் ராசிகள் பலம் பெறும்.. மிதுன ராசிக்கு குருவின் பார்வை
8,,10,,12 ஆம் வீடுகளுக்கு ஏற்படுகிறது ..
பொதுவாக நாலில் குரு அமர்ந்தால் நாட்டை விட்டு வெளிய செல்லவேணும்
என்று ஒரு சோதிட பழமொழி உண்டு . அங்கு சென்றாலும் பிழைக்க வேண்டாமா? அதற்காக செல்ல வேண்டி இருக்கும் .
குரு நாலில் அமர்வதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படலாம் .. ஆனால்
கல்வி மேம்படும் , வெற்றி கிட்டும் , வண்டி வாகனம் , வீடு இவைகளில் பராமரிப்பு செலவு உண்டாகும் .

அடுத்து குருவின்  5ஆம் பார்வை மிதுன ராசிக்கு எட்டாம் வீடான மகரத்திற்கு விழுகிறது . எனவே தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம் .ஜாமீன் போடுவது வேண்டாம் .  எல்லோரிடமும் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. மற்றொரு விதத்தில் குருவின் பார்வை விழும் எட்டாம் இடம்  சில நன்மைகளையும் செய்யும், வெளிநாட்டு தொடர்புகள் நன்மை பயக்கும் , வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு விசா கிடைத்து செல்லவேண்டி இருக்கும் .


அடுத்து குருவின் ஏழாம் பார்வை  மிதுனராசியின் பத்தாம் வீட்டில் விழும்.

இந்த ராசிகாரர்களில் ஒருசிலருக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும்
தொழில் மேம்படும் , வியாபாரம் நன்றாக நடக்கும் , கடன்கள் கட்டுக்குள் இருக்கும்..தொழிலில் புதிய ஒப்பந்தகள் கிடைக்கும் ,, வியாபார, அபிவிருத்தி இருக்கும் .

அரசு பணியாளர்கள் , பதவி உயர்வு பெறுவார்கள் , இட மாற்றம் இருக்கும்
ஒரு சிலருக்கு விருப்பம் இல்லாத இட மாற்றம் இருக்கும் . பொருது கொள்ள வேண்டும்


அடுத்து குருவின் 9ஆம் பார்வை மிதுனத்தின் 12 ஆம் வீட்டுக்கு விழுகிறது
இதனால் சுப செலவுகள் ஏற்படும் . குடும்ப சொத்தை விற்க ஆசை ஏற்படும்
அப்படி விற்றால் அந்த பணம் வேறு வழியில் செலவாகும் ,, தள்ளிபோடுவது நல்லது ... கோர்ட்டு வழக்கு இருந்தால் தற்போது முடிவுக்கு வருவது கடினம்
தளி போடுவது நலம்

பரிகாரம் :  வயதான பெரியவர்களுக்கு உதவுங்க... குலதெய்வத்தை வழிபடவும்  நன்மைகள் நடக்கும்.




கடக ராசி :



இதுவரை  கடக ராசிக்கு குரு பகவான் 2 ஆம் இடத்தில் இருந்து நல்ல பலன்களை செய்து கொண்டிருந்தார் .. தற்காலம் 3ஆம் இடமான கன்னிக்கு சென்றுள்ளார் . இந்த இடம் கடக ராசிக்கு அவ்வளவு நல்ல இடம் இல்லை .
மறைவு ஸ்தானம் .இதனால் நிறைய நல்ல பலன்கள் நடப்பது கடினம்
அனால் குருவின் பார்வை பலம் நன்மை செய்யும்

இந்த ராசி அன்பர்களின்  முயற்சிகள் வெற்றி பெரும் , இந்த ராசி இளைய பருவத்தினருக்கு  திருமண யோகம் கிடைக்கும் ,, புத்திர பாக்கியம் கிடைக்கும் ,நீண்ட தூர பிரயாணம்  செய்ய வேண்டி வரும் .  இளைய சகோதரத்தினால் , லாபம் உண்டு .  ஒரு சில கலைஞர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் ..வெளிநாட்டுக்கு சென்று இசை நிகழ்ச்சி செய்து வர
சந்தர்ப்பம்  உருவாகும் ....

இனி குரு பகவான் தன் 5 ஆம் பார்வையாக கடகத்தின் 7ஆம் வீட்டை பார்க்கிறார் . இதனால்  திருமணதிற்கு காத்துகொண்டிருக்கும் இளவயதினருக்கு திருமணம் நடக்கும் . ஒரு சிலரின் காதல் திருமணம் பெரியவர்களின் சம்மதத்தோடு நல்லபடியாக நடக்கும் . பிரிந்திருந்த கணவன்
மனைவி ஒன்று சேர வழி பிறக்கும் .  கூட்டு வியாபாரம் செய்பவர்கள் நல்லினகத்தோடு  இருப்பார்கள் , நெருங்கிய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள் . உங்களுடன்  பணிபுரிபவர்களுடன்  நல்ல ஒற்றுமை ஏற்படும்










இனி கடக ராசியின் 9ஆம் வீடான மீனத்தை  குரு தன 7 ஆம் பார்வையால்
பார்கிறார் .எனவே பாக்யஸ்தானம் வலுபெறுகிறது  இதன் பலனாக ஒருசிலர்
வெளி நாடுகளுக்கு சென்று வர சந்தர்ப்பம் கூடிவரும் . அதனால் லாபங்கள் கிடைக்கும் . பாக்யதிபதியான குரு 3 ல் மறைவதால்  தந்தையிடமிருந்து கிடைக்கும் நன்மைகள்  குறையும் . அனால் தந்தையின் உடல்நிலை

நன்றாக இருக்கும் . ஒரு சிலர் காசி , ராமேஸ்வரம்  போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று வருவார்கள் . அப்பா வழி சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் அவை சரியாகும் ..


அடுத்து குருவின் 9ஆம் பார்வை  கடகத்தின்  11 ஆம் வீட்டுக்கு விழுகிறது
இதுவும் நன்மை செய்யும் இடமாகும் ..பேச்சு போட்டி , பாட்டு போட்டி போன்றவற்றில் கலந்துகொள்பவர்களுக்கு  வெற்றி கிடைக்கும் ..ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும், சொந்த வியாபாரம், கூட்டு வியாபாரம்
போன்றவை நல்ல லாபம் தரும் ..நண்பர்கள் மூலமாகவும் நிறைய லாபங்கள் கிடைக்கும் ...

பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில் , குருவின் பார்வை பலத்தால் கடக ராசி காரர்கள்  மிகுந்த நல்ல பலனை பெறுவார்கள் ..


பரிகாரம் :   குரு தலமான திருசெந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வழி பட நன்மைகள் நடக்கும்



















சிம்மம் ராசி :

இதுவரை ஜென்ம ராசியில் இருந்த குரு பகவான் இரண்டாம் இடமான கன்னி ராசிக்கு 2-8-2016 ல் மாறிவிட்டார் ..குரு ஜென்மத்தில் இருந்த போது
இந்த ராசி அன்பர்களுக்கு அவ்வளவு நன்மை செய்யவில்லை , காரணம் ராகு சேர்க்கையால் ... ..சிம்ம ராசி அன்பர்களுக்கு குரு பகவான் 5க்கும் எட்டுக்கும்
அதிபதியாவர். இவர் சிம்ம ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கு வந்து நன்மைகளை செய்யவிருக்கிறார்.
இதுவரை பண தட்டுபாடு இருந்தது மறையும் .. தாராளமான பண
வரவுகள் இருக்கும்..
உங்கள் பேச்சு சபை ஏறும் .. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் .. திருமண தடை ஏற்பட்டிருக்கும் அன்பர்களுக்கு  இந்த வருடம் திருமணம் நடந்து குடும்பம் அமைய குரு பகவான் வழி செய்வார்.
பள்ளி பருவ மாணவர்களுக்கு கல்வி நன்றாக வரும் ,, நல்ல மதிப்பெண்கள்  பெறுவார்கள் ..இந்த ராசி ஜோதிட அன்பர்களுக்கு குரு புதன் வீட்டுக்கு வருவதால் வாக்கு பலிதம் உண்டாகும் ..

இனி குருவின் பார்வை பலம் பார்க்கலாம் .. சிம்ம ராசியின் 6ஆம் வீட்டை குரு தன் 5 ஆம் பார்வையாக பார்கிறார் . மேலும் கோசாரத்தில் சனி தன் 3 ஆம் பார்வையாக நாலாம் வீட்டிலிருந்து 6 ஆம் வீட்டை  பார்பதால்  வீடு வாங்க , வீடு கட்ட கடன் வாங்க வேண்டிவரும் ., மேலும் ஒரு சிலருக்கு
நிலம் , மனை வாங்ககும் யோகம் ஏற்படும் .  ஒரு சிலர் குடும்ப செலவுகளுக்காக கடன் வாங்குவர் .. சிலர்  குழந்தைகளின் கல்விக்கு கடன் வாங்குவர் .. எப்படியோ ,பணம் வரும் .. சிம்ம ராசியில் உள்ள வயதானவர்கள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்வது நன்மை பயக்கும்.


















அடுத்து  குரு பகவன் தன் 7 ஆம் பார்வையாக சிம்ம ராசியின் எட்டாம்
வீட்டை பார்வை செய்வார். கோர்ட் வழக்கு, சண்டை சச்சரவு இருந்தால்
அவை சுமுகமாக தீரும் .


முன்பு செய்த முதலீடுகளுக்கு தற்போது நல்ல பலன் குருவருளால் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும்... எதிர்பாராத பண வரவு இருக்கும்..

அடுத்து  குரு தன் 9 ஆம் பார்வையாக சிம்ம ராசியின் 1௦ ஆம் வீட்டை பார்கிறார் . இதுவரை அஷ்டம சனியால் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகும்
வேலையில் இருபவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும் ,,சம்பளம் கூடும்
வேலை இல்லதவர்களுக்கு வேலை கிடைக்கும் .. வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் ,,வியாபார முனேற்றம், தொழில் முன்னேற்றம்  போன்றவை
நல்ல விதமாக நடக்கும் .இதனால் நல்ல வருமானம் கிடைக்கும் ,, இந்த ராசி அன்பர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும்  வெற்றி பெரும் .


பரிகாரம்:
 ஏழை குழந்தைகளுக்கு  கல்வி கட்டணம்  கட்டி உதவி செய்வது .
வயதான வர்களுக்கு  உதவுவது ,, அருகில் உள்ள சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்தி வழிபாடு சிறந்தது

==============================================================================























கன்னி ராசி :

குருபகவான்  கன்னி ராசிக்கு பன்னிரெண்டாம் வீடான சிம்மத்திலிருந்து
விரயங்களையும் , ஏமாற்றங்களையும் கொடுத்துவந்தார் . 2-8-2016 முதல்
ஜென்மரசியான கன்னிக்கே மாறி விட்டார். உத்திர நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார் .  பொதுவாக ஜென்ம குரு
நன்மை செய்யாது என்பது ஜோதிட பழமொழி .. ..ஆனால் குருவுக்கு  இந்த வீடு ஒருவிதத்தில் நட்பு வீடு என்பதால்  நன்மைகளை எதிர்பார்கலாம்
ஜென்மத்தில் குரு வரும் பொது மன குழப்பம் அதிகமாக இருக்கும்.
ஜென்மத்தில் குரு வந்தபோதுதான் ஸ்ரீராமர் வனவாசம் சென்றார் .. அதுபோல்
ஒரு சிலருக்கு  அவர்கள் இருக்கும் ,வசிக்கும் இடத்தை விட்டு வெளியூருக்கு
அல்லது வெளி நாடுகளுக்கு சென்று பொருள் ஈட்ட , அல்லது வழ வேண்டும்
என்பது விதி .

அடுத்து குருவின் பார்வை பலனை பாப்போம்.
கன்னி ராசியின் 5ஆம் வீடான மகரம், 7ஆம் வீடான மீனம் மற்றும்
9 ஆம் வீடான ரிஷபம் ஆகிய வீடுகளை குரு பார்வை செய்வார். குருபகவான் தான் இருக்கும் இடத்து பலனை விட பார்க்கும் இடதுக்கு
பலம் சேர்ப்பார்.  அதன்படி  5 ஆம் பார்வையாக சனிபகவான் வீடான மகரத்தை பார்ப்பார் , கோசாரத்தில் சனியும் 3 ஆம் பார்வையாகதன் சொந்த வீட்டை  பார்கிறார் 5 ஆம் வீடு பூர்வ புண்ணியஸ்தானம் , இதனால் குலதெய்வ வழிபாடு, சித்தர் வழிபாடு போன்றவற்றை  ஒரு சிலர் அனுபவிப்பார்கள் . ஜனவரி மாதத்திற்கு  பிறகு இளைய பருவத்தினருக்கு மேற்கல்வி பயில ஆர்வம் உண்டாகும் ,அவை தடை இல்லாமல் இடம் கிடைக்கும் .திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு  அந்த பாக்கியம்
ஏற்படும். ஒரு சிலர் காதலித்து கொண்டு இருந்தவரையே பெற்றோர் சம்மதத்தோடு  திருமணம் செய்வார்கள் .


அடுத்து குரு பகவான் 7 ஆம் பார்வையாக கன்னி ராசிக்கு 7 ஆம் இடமான
மீனத்தை  பார்கிறார்.
இதன் பலனாக கன்னி ராசி அன்பர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும்
வரும் தை மதத்திற்கு மேல் கெட்டி மேளம் கொட்டிவிடும் .அதாவது திருமணம் நடந்து விடும் .

செய்துவரும் தொழில், வியாபாரம் அமோகமாக நடக்கும் .. வேலையில் உள்ளவர்களுக்கு தடைபட்டு கொண்டிருந்த பதவி உயர்வு ,இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும் ..இதனால் வாழ்க்கை தரம் உயரும்.
இவர்களுடன் வேலை செய்பவர்கள் இந்த ராசி அன்பர்களின் யோசனைகளை
மதித்து கேட்பார்கள் , வேலையில் திருப்தி இருக்கும் ..ஆனால் நிறைய நேரம் வேலையில் செலவிடவேண்டி இருக்கும்.
கூட்டு வியாபாரம் ,நல்ல முன்னேற்றம் அடையும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்.
ஒரு சிலர் வேலையில்  விரும்பிய இடமாற்றத்தை  கிடைக்க பெறுவார்கள் .
அதனால் புதிய மனிதர்களை சந்திப்பார்கள் , மாற்றங்களை ஏற்று மேன்மை பெறுவார்.

அடுத்து குருவின் 9 ஆம் பார்வை , ரிஷபத்துக்கு  விழுகிறது .
இது கன்னிக்கு 9 ஆம் வீடு .அப்பாவின் உடல் நிலை நன்றாக இருக்கும் .
அவருடன் சுமுக உறவு இருந்துவரும் . அப்பா வழி சொந்தங்களுடன் நல்லிணக்கம் உண்டாகும் . பூர்விக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகி  வருமானம் வர வழி பிறக்கும் . ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் ,, ஜனவரிக்கு மேல் இது கிடைக்கும் .. ஒரு சிலர் புனித யாத்திரை செல்வார்கள் .. குரு ஸ்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு .அவர்களின் ஆசியும் கிடைக்கும் ..
ஜென்ம குருவால் மறதி.உண்டாகும்  கைபேசி, வாகன சாவி போன்றவற்றை
மறந்து எங்காவது வைத்துவிட்டு தேடும் நிலை ஏற்படும் ..மனக்குழப்பம் உண்டாகும் .டென்ஷன் உண்டாகும் .. கவனம் தேவை..
பரிகாரம்:   சாதுக்களுக்கு உதவ வேண்டும் , அன்னதானம் செய்தல் நலம் ...




துலாம் ராசி :


இதுவரை துலா ராசிக்கு 11 ஆம் இடத்திலிருந்து ஒரு சில நல்ல பலன்களை
செய்துவந்த குரு பகவான், 2-8-2016 அன்று  கன்னி ராசிக்கு மாறி உள்ளார்
இது துலா  ராசிக்கு 12 ஆம் இடமாகும் ..
இது துலா ராசிக்கு , துலா லக்னத்துக்கு குரு , 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு அதிபதியாக வரும் குரு பகவான் நல்லது செய்ய மாட்டார் , இவர் 12 ஆம்
வீட்டில் மறைவது ஒரு விதத்தில் நன்மையே..

12 ஆம் வீட்டின் பலன்கள் பதிப்பினை தராது எனலாம் . இது விரைய ஸ்தானம் என்பதாலும், குரு இயற்கை சுபர் என்பதாலும் , சுப செலவுகளை தருவார்.






துலா  ராசியின் நாலாவது ராசியை குரு பார்ப்பதால் , வீடு கட்டுவது, வாங்குவது போன்ற நல்ல செலவுகள் செய்ய வேண்டி வரும். ஒரு சிலர் வண்டி வாகனங்களுக்காக செலவு செய்யலாம் .. ஒரு சிலர் கல்வி செலவுகள் செய்வார்கள் .. உயர் படிப்புக்கு கடன் வாங்கி படிப்பார்கள் .
வெளிநாடுகளுக்கு சென்றும் சிலர் படிக்க சந்தர்ப்பம் கூடி வரும்.

அடுத்து  குரு பகவான் 7வது பார்வையாக துலா ராசியின் 6 வது வீட்டை
பார்பார்.  இதன் பலனாக , புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும் ,
ஒரு சிலர் பழைய கடனை அடைத்து  புதிய கடனை பெறுவார்கள்
உடல் நலம் பாதிக்க பட்ட துலாராசி  அன்பர்கள் தகுந்த மருத்துவ பரிசோதனை எடுத்துகொண்டால் நலம் . ஒரு சிலருக்கு வயிற்று வலி வர வாய்புள்ளது . ..
அடுத்து குரு தன் 9 ஆம் பார்வையாக துலாரசியின்  எட்டாம் இடத்தை
பார்கிறார் .. ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும் .
வழக்குகள் இருந்தால் அவை குரு பார்வையால் சரியாகும் .வரவேண்டிய  பணம்  வந்து விடும் . அரசு வேலையில் இருந்து ரிடயர் ஆகி இருப்பவர்களுக்கு வரவேண்டிய ஒய்வு கால பணம் எல்லாம் வந்து விடும் .
பணிபுரியும் தொழிலாளர்கள்  அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம் .. வேலை பளு அதிகமாக  இருக்கும் .ஒரு சிலர் வேலை காரணமாக கணவன் –மனைவி  பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் ...
துலா ராசி அன்பர்கள் இந்த குரு பெயர்ச்சியில் ,  குருபகவானின்  பார்வை பலத்தால் ஒரு சில நன்மைகளை பெறுவார்கள் ..
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு  நல்ல திருப்பதை உங்கள் வாழ்வில் கொடுக்கும்.. ஏழரை சனி காலம் நடப்பதால் ஒரு முறை திருநள்ளார் சென்று சனிபரிகரம் செய்வது சிறந்தது .. முடவர்களுக்கு அதிகம் உதவுங்கள் ,,,



















விருச்சிக ராசி :


இதுவரை 1௦ ஆம் வீட்டில் இருந்த குருபகவான்  11 ஆம் இடமான கன்னிக்கு மாறுகிறார் .. ஏழரை சனியின் கடுமையான பலன்களும் குருவின் பத்தாம் வீடு பலன்களும் இந்த ராசி அன்பர்களுக்கு மன அழுத்தத்தையும்  சோர்வையும் கொடுத்திருக்கலாம் இவை இந்த குருபெயர்சியின் காரணமாக கொஞ்சம் விலகும்.
ஏழரை சனியின் இரண்டாவது சுற்றாக உள்ளவர்களுக்கு இந்த குருபயற்சி நல்ல அனுபவங்களையும் ,வெற்றிகளையும் தரும் ..சனியின் முதல் சுற்று , மற்றும் மூன்றாவது சுற்றில் இருப்பவர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி நல்ல ஆறுதலை தரும் என்பதில் மிகையில்லை. .. விருச்சிக அன்பர்களுக்கு குருவானவர் 2, மற்றும் 5 ஆம்
வீடுகளுக்கு அதிபதி ஆவார் .. அவர் 11 ஆம் வீட்டில் அமர்வது ஒரு யோகமே .

நீண்ட காலமாக நீங்கள் போட்ட திட்டங்கள் செயல் வடிவம் பெறும். சென்ற ஆண்டில் ஏற்பட்ட தொழிலின் பின்னடைவு , ஏமாற்றங்கள், போன்றவை தற்போது
மாறும் . பணியாளர்களுக்கு இருந்த வேலையின் தேக்க நிலை மாறும் ,,இந்த வருடம் பதவி உயர்வு , சந்தோஷமான சம்பள உயர்வு, போன்றவை கிடைக்கும்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கு  தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்

இனி குருவின் 5 ஆம் பார்வை 3 ஆம் வீடான மகரதில் விழுகிறது . இதனால் மனதில் ஒரு நம்பிக்கை, தைரியம் பிறக்கும் , எந்த வேலையையும் எடுத்து முற்சி செய்து வெற்றகரமாக முடிப்பீர்கள் . வேலை நிமித்தமாக அடிக்கடி சிறு பயணங்கள்
செய்வீர்கள் . குருவின் பார்வை 3 ஆம் வீட்டுக்கு படுவதால் இளைய சகோதரர் உறவு பலப்படும். அவர் மூலம் உங்களுக்கு நிறைய லாபங்கள் கிடைக்கும். சனி பகவானும் 3 ஆம் பார்வையாக உங்கள் 3 ஆம் இடத்தை பார்ப்பதால் குருவின் அருள் சிறிது தடை படலாம் .. அவை ஜனவரி ௧௭ ஆம் தேதி வரை இருக்கும்
அதன் பிறகு எல்லாம் வெற்றி தான் ..

அடுத்து குருவின் 7 ஆம் பார்வை உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டுக்கு,அதாவது   ,குருவின் சொந்த வீட்டுக்கு விழுகிறது ..இது இன்னும் சிறப்பு. பூர்வ புண்ணியம் பலப்படும். நீங்கள் செய்த புண்ணிய கர்மாவின் பலன்கள் தற்போது நல்ல பலன்களை தரும் . ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் .சிலருக்கு ஆடை,ஆபரணங்கள் சேரும் . தங்க நகை வாங்குவீர்கள். திருமணமாகி குழந்தை உள்ளவர்கள் அவர்களின் வளர்ச்சி, கண்டு மகிழ்வீர்கள். .குழதைகளின் உடல் நல குறைபாடு இருந்தால் அவை குருவின் அருளால் சீராகும் . இதுவரை இருந்த பண கஷ்டங்கள் தீரும் , பணம் உங்கள் பையை நிரப்பும் ..நீண்டகால சேமிப்புகள் தொடங்குவீர்கள் .. குழதைகளின் கல்விக்கு சேமிப்பீர்கள் .



அடுத்து குருவின் 9 ஆம் பார்வை உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டுக்கு விழுகிறது.
இதனால் இவர்களின் கணவன் / மனைவி நிலை நன்றாக இருக்கும்.
சமுதாயத்தில் நல்ல மதிப்பு உண்டாகும் . நண்பர்கள் உதவுவார்கள் .நண்பர்களின் உறவு நிலை மேம்படும் .. வியாபாரத்தில் உள்ளவர்களின் பங்குதாரர்கள் நல்ல
நட்புடன் இருப்பார்கள் . வியாபாரம் முன்னேற்றம் அடையும்.  ஒரு சில இளைய ராசி அன்பர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும் .குருவின் பார்வை ஏழாம் வீட்டில் படுவதால் திருமணம் நிச்சயமாகும் , நடக்கும் .

பொதுவாக எந்த ஒரு கிரகமும் 11 ஆம் வீட்டில் அமர்ந்தால் நல்ல பலன்களை செய்வார்கள் .. குரு சுப கிரகம் எனவே கூடுதல் நன்மை ஏற்படும்.
ஏழரை சனியும் ஜனவரி ௧௭ ஆம் தேதிக்கு பிறகு தனுசு ராசிக்கு பாத சனியாக
மாறுவார் . அவரால் உண்டாகும் தொல்லைகள் குருவருளால் சமாளிக்கப்படும் .
கவலை வேண்டாம் .. விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த ஒரு வருடம் பொன்னான நேரம் எனலாம் ..
பரிகாரம் :     ஏழரை சனி நடைபெறுவதால் இந்த ராசி அன்பர்கள் ஒரு முறை திருநள்ளார் தர்பாரன்நீஸ்வரர் கோவிலுக்கு சென்று மூலவரையும், அம்பாளையும் தரிசித்து , சனி பகவானையும் தரிசித்து வந்தால் சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்களை சமாளிக்கலாம் ..
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு செவ்வரளியில் அர்ச்சனை செய்வது நல்லது ..















  .









தனுசு ராசி :


தனுசு ராசிக்கு  இதுவரை 9 ஆம் வீட்டில் இருந்து வந்த குருபகவான் பல
நன்மைகளை செய்திருக்கலாம் . இருந்தாலும் ராகுவுடன் இணைந்ததால் அவரால் முழு நன்மைகளை கொடுத்திருக்க முடியாது . .இனி குருபகவான் உங்களின் 9 ஆம் ராசியில் இருந்து 1௦ ஆம் ராசிக்கு மாறுகிறார் .  பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது ஜோதிட பழமொழி . இது யாருக்கு பொருந்தும் எனில் , அரசியலில் உள்ளவர்களுக்கு ஓரளவு பொருந்தும் .. மிக உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு பொருந்தும் .. சாதாரண  மக்களுக்கு பொருந்தாது . . மேலும்  தனுசு ராசி அன்பர்களுக்கு ஏழரை  சனி காலம் ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகின்றன . இதுவரை குருவின் பார்வை ராசிக்கு இருந்ததால் சனியின் தாக்கம் அவ்வளவு பாதிப்பை தரவில்லை .. இனி ராசிக்கு குருபார்வை இல்லை என்று பயப்படவேண்டாம் .. வேறு அசுப கிரக பார்வையும் இல்லை . எனவே பதிப்புகள் ஏற்படாது . குருவே உங்கள் ராசியின் அதிபதி ,அவர் 1௦ இல் அமர்ந்தால் ஒன்றும் பயப்பட தேவை இல்லை பதவியில், வேலையில் எந்த பாதிப்பும் வராது .

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்துக்கு பலம் உண்டாகும் ..
குருவின் பார்வை தனுசு ராசி அன்பர்களின்  2,, 4, 6 ஆம் வீடுகளுக்கு  ஏற்படும்
பத்தாமிடத்தில் குரு அமர்வது ஒரு வகையில் சில கஷ்டங்களை தரும்.
வேலையில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களுடன்  கவனமாக பழகவும்
ஆசை காட்டி வேலை வாங்கி மோசம் செய்வார்கள் ..சனி பகவானின் பலன்களும் நன்றாக இல்லை எனவே கவனம் தேவை. வியாபாரத்தில் உள்ளவர்களும் அதிக விரிவாக்கம் செய்ய வேண்டாம் ,, பணம் கொடுக்கல், வாங்கலில் அகலக்கால் வைக்க வேண்டாம் .

குரு பகவான் தன்னுடைய 5 ஆம் பார்வையாக 2 ஆம் வீட்டை பார்ப்பதால் , பண வரவு நன்றாக இருக்கும்,  கணவன் – மனைவி  மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
குடும்பம் சந்தோஷமாக இருக்கும் . நீங்கள் கூறும் கருத்துக்களை மற்றவர்கள் கேட்பார்கள் . வாக்கு பலிதம் இருக்கும் . குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் .


அடுத்து குரு பகவான் தனது 7 ஆம் பார்வையாக தனுசுவின் நாலாம்  ஆம் வீட்டை
பார்கிறார். இதன் பலனாக பழைய வாகனத்தை விற்று ,புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் புதிய கார் , பைக் , போன்ற வாகனங்கள் வாங்குவர். அதற்கு கடன் உடன் கிடைக்கும் . அம்மாவின் உடல் நலம் மிக நன்றாக இருக்கும் .
மாணவ பருவத்தில் இருப்பவர்களுக்கு , படிப்பு நன்றாக வரும், கல்வி தொகை கிடைக்கும். , கல்லூரியில் படிப்பர்களுக்கு நல்ல வேலைக்கு செல்ல உறுதி அளிக்கப்படும்.
அடுத்து குரு பகவானின் 9 ஆம் பார்வை தனுசுவின் 6 ஆம் வீட்டுக்கு விழும் .
இந்த ராசி அன்பர்களுக்கு எதாவது உடல் நலமின்மை இருப்பவர்கள் தகுந்த
மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் . அதற்கு தகுந்த மருந்து எடுத்துகொள்வது நலம் பயக்கும்.
வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும்  வாங்குவீர்கள் .. ஒரு சிலர் கல்வி கடன்
வாங்குவீர்கள் . பூர்விக சொத்துகளில் வழக்குகள் இருந்தால் அவை குரு பார்வையால் கட்டுக்குள் இருக்கும் . ஏனெனில் சனியும் 6 ஆம் வீட்டை பார்பதால் ,கொஞ்சம் இழுபறியாக இருக்கும் .
ஒருசிலருக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் குறைந்து ,தொழில் சீராகும்.
ஒரு சிலர் அப்பாவின் தொழிலையே செய்ய கூடும். அது தற்போது  முன்னேற்றம்
அடையும்.

பரிகாரம்:
ஏழரை சனியின் பிடியில் உங்கள் ராசி இருப்பதால் , ஒருமுறை திருநள்ளார் சென்று
சனி பகவானுக்கு பரிகாரம் செய்தால் நன்மையே.
வியாழக்கிழமை  தக்ஷ்ணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வரவும் ..































மகரம் ராசி   :

இதுவரை அஷ்டமத்தில் இருந்த குரு பகவான் இனி உங்கள் ராசியின் 9 ஆம்
வீட்டிற்கு மாறுகிறார் . சென்ற வருடம்  பல கஷ்டங்களை பார்த்திருப்பீர்கள் .
அவை இனி விலகும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3, மற்றும் 12 இடத்திற்கு அதிபதியாவார் . அவர்
உங்கள் ராசிக்கு 9 இல் அமர்வது நல்லதே .மேலும் அவர் உங்கள் ராசியை 5 ஆம் பார்வையாக பார்ப்பார்.  பிறகு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டை
பார்ப்பார் . பிறகு 9 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தை பார்ப்பார் .

இயற்கை சுபரான குரு பகவான்  உங்கள் ராசியின் 9 ஆம் வீடான கன்னியில் அமர்வது சிறப்பு.. இந்த ராசி அன்பர்களில் நடுத்தர  வயதினர் அதிக நன்மைகளை
பெறுவார்கள். இந்த ராசி அன்பர்களின் உடல் நலம் இனி நன்றாக இருக்கும் . சென்ற வருடம் ஒரு சில உடல் உபாதைகள் இருந்திருக்கும்.அவையாவும் இனி சீராகும்.
மனதில் நல்ல புத்துணர்வு ஏற்படும் .இந்த ராசி கலைஞர்களுக்கு, மீடியா தொழிலாளர்களுக்கு நல்ல நேரம் .. இவர்களின் புகழ் , ஓங்கும் . நல்ல
வாய்புக்கள் கிடைக்கும். தகவல் துறை, கணினி துறை ,ஏஜென்சி வியாபாரம் , கமிஷன் வியாபாரம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு ஏற்றம் இருக்கும் .


குருவின் 5 ஆம் பார்வை உங்கள் ராசியிலேயே விழுவதால் , உங்கள் மனம், தேக ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும் . நல்ல எண்ணங்கள் , முயற்சிகள் இருக்கும்.
இதனால் பலனாக எல்லா வேலைகளிலும் வெற்றி உண்டாகும் . அதிர்ஷ்ட தேவதை
உடன் வருவாள் . நீங்கள் விரும்பியது நடக்கும்.

அடுத்து குரு பகவான் தனது 7 வது பார்வையாக உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டைப் பார்ப்பார் . இந்த இடம் தைரிய ஸ்தானம், முயற்சி ஸ்தானம் , வீரியம் , வெற்றி ஸ்தானம், மற்றும் இளைய சகோதர ஸ்தானம் .இது குருவின் வீடாகும் . தனது வீட்டையே பார்ப்பதால் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.. 3 ஆம் இடம்  கர்ணபூஷன இடம் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள்.
இதன் பயனாக இப்போது நீங்கள் தங்க நகை வாங்குவீர்கள் .அதற்கு குருவரு செய்வார் .ஒரு சிலர் உல்லாச பயணம் சென்று வருவார்கள் .
ஒருசிலர் தனது தம்பி , தங்கைகளுக்காக, பரிசுகள் வாங்குவீர்கள்,
அவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் ,..ஒருசிலரின் மாமனார், அவர் வீட்டு உறவுகள் பலப்படும். அவர்களால் பயன் பெறுவார். ஒருசிலர் உயர் ரக செல் போன் வாங்குவீர்கள் ..




அடுத்து குருபகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீடான ரிஷபத்தை தனது
9  ஆம் பார்வையாக   பார்கிறார் ..இந்த இடம் உங்கள் ராசியின் பூர்வ புண்ணியஸ்தானம் , ,முன் வினைகள் அதன் பயன்களை இந்த பிறவியில்
அனுபவிப்பது. இந்த இடத்தை குரு பார்ப்பதால் நல்ல பலன்களே நடக்கும்.
நீங்கள் நினைத்தது நடக்கும். இந்த ராசி அன்பர்கள் ஒரு சிலருக்கு திருமணமாகி குழந்தை பிறக்காமல் இருந்தால் இப்போது அந்த பாக்கியம் கிடைக்கும் .
மகன், மகள் விஷயத்தில் இருந்த மன கவலைகள் விலகும். அவர்களும் பெற்றோர்
பேச்சை கேட்டு நடப்பார்கள் . வியாபாரிகளுக்கு போட்டிகள் இருக்கும், ஆனால் சீரான வருமானம் இருக்கும்
ஒரு சில மகர ராசி அன்பர்கள் தாத்தா, பாட்டி  ஆவார்கள் ,
பேரனையோ . பேத்தியையோ கொஞ்சும் நேரம் வந்துள்ளது அதற்கு குரு பகவான்
அருள் செய்வார்  ஒரு சிலருக்கு கடன் தொல்லை இருக்கும் .அவை யாவும்
தற்போது நீங்கும் .

ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நின்றிருந்தால் அவை  இப்போது குருவருளால் நல்ல விதமாக முடிந்து விடும் . ஒரு சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் வரும் ..

பரிகாரம்:

குல தெய்வ வழிபாடு சிறந்தது . ஒருமுறை திருசெந்தூர் செந்தில் ஆண்டவனை தரிசனம் செய்து வந்தால் எல்லாம் நன்மையாக முடியும்

























கும்பம் ராசி .:


இதுவரை  கும்ப ராசிக்கு  7 ஆம் இடத்தில இருந்த குரு பகவான் நல்ல பலன்களை
கொடுத்து வந்தார் . இனி அவர் எட்டமிடமான கன்னிக்கு மாறிவிட்டார் ..பொதுவாக
எட்டாம் இடம் குருவுக்கு நல்ல இடம் இல்லை . மறைவு ஸ்தானம் . அதுவும் கும்ப ராசிக்கு குரு இரண்டு, மற்றும் பதினொன்றாம் இடத்துக்கு அதிபதி .இரண்டுமே நல்ல ஆதிபத்தியம் பெற்றவை. .. அவர் அஷ்டமத்தில் அமர்வது நல்ல பலன்களை சொல்ல முடியவில்லை..  எனினும்  குருவின் பார்வை கும்ப ராசியின் இரண்டு, நான்கு, மற்றும் 12 ஆம் வீடுகளுக்கு படுகிறது
கன்னி குருவிற்கு நட்பு வீடு . எனவே அவ்வளவு கஷ்டத்தை குரு தர மாட்டார் .
எட்டில் அமரும் குரு , கும்ப ரசி அன்பர்களுக்கு திடீர் அதிர்டங்களை தருவார்
ஒரு சிலருக்கு வீடு மாற்றம், வேலையில் இட மாற்றம் உண்டாகலாம் .


அடுத்து குருவின் 5 ஆம் பார்வை உங்கள் ராசியின் 12 வது வீட்டில் படுகிறது.
ஒரு சிலர் தாங்கள் இருக்கும் இருப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று
பிழைக்க வேண்டும் .இதனால் நிறைய செலவுகள் ஏற்படும்.  ஒரு சிலருக்கு
அவர்களின் மகன் அல்லது மகள் திருமண செலவுகள் ஏற்படும்.  ஒருசிலர்
வீடு , வாகனம் பராமரிப்பு செலவுகள் செய்ய வேண்டி வரும் .. ஒரு சிலர்
புதிய வீடு வாங்குவார்கள் .

அடுத்து குருவின் 7 ஆம் பார்வை உங்களின் 2 ஆம் வீடான மீனதிர்க்கு விழும்
இது குருவின் சொந்த வீடு என்பதால் பலன்கள் மிக நன்றாக இருக்கும்.
குழந்தைகளின் கல்வி மேம்படும் . குடும்பத்திற்கு பணம் வந்து கொண்டு இருக்கும் . தட்டுபாடு இருக்காது .  ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் என்று சொல்வார்களே அதுபோல் எதிர்பாராமல் ஒரு பெரிய தொகை கிடைக்க வாய்ப்புள்ளது . எல்லா சுப விரயங்களையும் சமாளிக்க பணம் வரும் . கவலை வேண்டாம் .
ஜோதிடம் , வக்கீல் போன்ற வேலையில் உள்ளவர்களுக்கு வாக்கு பலிதம்
உண்டாகும் . மேலும்  குரு எட்டாம் வீட்டில் அமர்துந்துள்ளதால் சிறை காவலர், அதிகாரிகள் , நீதித்துறையில்  உள்ளவர்களுக்கும் நல்ல நேரமே ..

அடுத்து  குருவின் 9ஆம் பார்வை கும்ப ராசியின்  4 ஆம் வீட்டில் விழுகிறது .
இதன் பலனாக வீடு , மனை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.
பூர்விக சொத்துக்கள் இருந்தால் அவைகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும்

குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் இருக்கும் , ஒரு சிலர் தீர்த்த யாத்திரை செல்ல சந்தர்ப்பம் கூடி வரும் .. வியாபாரிகளுக்கு   நல்ல முன்னேற்றம் இருக்கும்
ஆனால் தீவிர முயற்சி இருந்தால்தான் இந்த நல்ல பலன்கள் நடக்கும்
பொதுவாக கும்பராசி அன்பர்களில் உள்ள அரசியல் , காவல் துறை , நீதித்துறை
மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கும் நன்மையே நடக்கும்
நீண்ட நாட்களாக குல தெய்வ வழிபாடு விட்டுப்போனவர்கள் இந்த வருடம் அதை நிறைவேற்றுவீர்கள் ..

எட்டில் குரு , ஏழில் ராகு , இருப்பதால் முறையான பரிகாரங்கள் செய்வது நலம்
ராகு , கேது பரிகாரம் செய்வது நல்லது .  குரு பரிகாரம் , சித்தர் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தால் நன்மை உண்டாகும்




:





































மீன ராசி:

மீனா ராசிக்கு குரு பகவான் இதுவரை 6 ஆம் இடமான  சிம்மத்தில் இருந்தார் . அவருடன் ராகுவும் இணைந்து பல இன்னல்களை தந்திருக்கலாம் . ஏனெனில்
ராசியாதிபதி  6 இல் மறைந்ததும், ராகுவோடு இணைந்ததும் ஒரு குறையே.
ஆனால் இந்த குருவானவர் 2- 8 – 2016 அன்று சிம்மராசியில் இருந்து உங்கள் ராசியின் 7 ஆம் வீடான கன்னிக்கு மாறிவிட்டார் . கன்னி வீடு  குருவுக்கு நட்பு வீடு. .
7 இல் இருக்கும் குரு இந்த வருடம் மீன ராசி அன்பர்களுக்கு பல நன்மைகளை
செய்யவிருக்கிறார் . மேலும் குருபகவான்  மீன ராசிக்கு 1 , 3, 11 ஆம் வீடுகளை
பார்வை செய்வார் . .குரு பகவான் தன சொந்த வீட்டையே பார்ப்பதால் இதுநாள்வரை இருந்த  கஷ்டங்கள் மறையும்.  பொருளாதார முன்னேற்றம்
இருக்கும். .சுறுசுறுப்பு, அதிக முயற்சி என்று ரொம்ப பிஸியகிவிடுவீர்கள்.

வியாபாரம் செய்பவர்கள் நிறைய லாபத்தை எதிர்பார்க்கலாம் . மன நிம்மதி,
உடல் ஆரோக்கியம்  சிறந்து விளங்கும்.  உங்கள் பிள்ளைகளால்  பெருமை
புகழ் உண்டாகும. அரசாங்க தடைகள் விலகும்.  மிகவும் ஏற்றமான வருடமாகஇந்த வருடம் மீனராசிக்கு இருக்குமென்பதில் சந்தேகமில்லை .

இனி குருவின் 5 ஆம் பார்வை மீன ராசியின் 11 ஆம் வீட்டுக்கு விழுவதால் உங்கள்
குழந்தைகளால் பெருமை , புகழ் உண்டாகும் . செய்யும் தொழிலில் நிறைய லாபம்
கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும்..  மூத்த சகோதரம், பெரியப்பா வீட்டாருடன்
நல்ல உறவு ஏற்பட்டு சந்தோஷம் அடைவீர்கள் . உங்கள் முயற்ச்சிகள் யாவும்
வெற்றி பெரும் . தொழில் அதிபர்கள், வியாபாரிகள் , அதை விரிவு படுத்துவார்கள்
இரும்பு வர்த்தகம், ரோடு காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வழி உண்டு .
அரசு பணியாளர்கள், தனியார் துறை பணியாளர்கள் எல்லோரும் மேலாளர்களின் கெடுபிடியிலிருந்து  விடுபட்டு நிம்மதியாக இருப்பார்கள். அதனால் ஊக்கமாக வேலை செய்வார்கள், அவர்களின் ஊதியமும் உயரும்.

அடுத்து குருவின் 7 ஆம் பார்வை மீனராசிக்கே விழுவதால், இந்த ராசி அன்பர்கள்
உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தேக ஆரோகியத்தில் குறைபாடுகள் இருந்தால்
அவை சீக்கிரம் குணமாகும் . ராசிக்கு 7 இல் குரு அமர்வதால் மனைவி அல்லது கணவருடன்  இதுவரை இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் அகலும் . மிக அன்னியோன்மாக இனி இருப்பார்கள் . நண்பர்கள், வியாபாரத்தில் உள்ள பங்குதாரர்கள் ஆகியோரால் நன்மைகள் பல உண்டு,
ஒரு சிலருக்கு நீண்ட தூர பயணங்கள்  செல்லும் சந்தர்ப்பம் வரும்.
ஒரு சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும் .



அடுத்து குருபகவான் தனது 9 ஆம் பார்வையாக மீன ராசியின் 3 ஆம் வீட்டை
பார்கிறார் ,
இதன் பலனாக இந்த ராசி அன்பர்கள் எந்த செயல்களில் முயன்றாலும் வெற்றி கிடைக்கும். தம்பி தங்கைகள் மூலம் நல்ல லாபங்கள் கிடைக்கும் .
புதிய தொழில் தொடங்க சரியான நேரம். ஒரு சிலருக்கு , படிப்புக்ககவோ , வேலை விஷயமாகவோ வெளிநாடு போக சந்தர்ப்பம் கூடிவரும்.
ஆடை , ஆபரண சேர்க்கை உண்டாகும் . சொத்து வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு
உண்டாகும் வீடு , வாங்கும் யோகம் , இது நவம்பர் மாதத்திற்கு பிறகு உண்டாகும்

பொதுவில் இந்த குருப்பெயர்ச்சி மீன ராசி அன்பர்களுக்கு ஒரு வரப்ரசாதம் என்றே சொல்லலாம் ..

பரிகாரம்:

குடும்பத்துடன் ஒருமுறை குரு பகவான் திருத்தலமான ஆலங்குடி சென்று
அங்குள்ள தெய்வங்களை வணங்கி தக்ஷிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வர
பல யோகங்கள் கிடைக்கும்

.


பின் குறிப்பு:  இங்கு சொல்லப்பட்ட குருப்பெயர்ச்சி பலன்கள் எல்லா ராசிக்கும்
பொதுவானவை. தனிப்பட்ட ஜாதகரின் தசா  , புக்தி , அந்தரம் பொறுத்து பலன்கள்
இருக்கும் .
அன்புடன்
Astro . E N SANKARAN
9962014793


































































Thursday, October 23, 2014

சென்னையை சுற்றி உள்ள நவகிரக கோவில்கள்

சூரியன் :--- ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் - கொளப்பாக்கம் (1)

(அல்லது) ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோவில் – செங்குன்றம்

சந்திரன்:- ஸ்ரீ சொமனாதீஸ்வரர் கோவில் -- சோமங்கலம்

செவ்வாய் :- ஸ்ரீ வைத்தீஸ்வரர் கோவில் - பூந்தமல்லி

புதன் :- ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில் - கோவூர்

குரு :- ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோவில் - போரூர் ( அல்லது )

ஸ்ரீ திருவல்லீஸ்வரர் கோவில் – பாடி (திருவாலிதாயம்)

சுக்கிரன் :- ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் - மாங்காடு, மற்றும்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர்

சனி :_ ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் - பொழிச்சலூர்

ராகு :- ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் - குன்றத்தூர்

கேது :- ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோவில் - கெருகம்பாக்கம்
ஜோதிட கட்டங்களும்  ,, சந்த்யாவந்தன  ஆச்சமனமும்




சந்தியாவந்தனமும்  ..
ோதிட பாவங்களும்

ஆச்சமனதிர்க்கும் ,, 12 பாவத்திற்கும் உள்ள சம்பந்தம்
என்னவெனில் சந்தியா வந்தனம் செய்யும் பொழுது , என்ன மந்திரம் சொல்லுவீர்கள் கேசவா , நாராயணா , மாதவா , கோவிந்தா , விஷ்ணு, மது சூதனா , திருவிக்ரமா , வாமனா , ஸ்ரீதரா . ரிஷிகேசா , பத்மநாபா , தாமோதரா .. ஆகிய 12 நாமாக்களை சொல்லுவோம் அல்லவா? அவைதான் 12 பாவங்களுக்கும் பொருந்தும் ...
கேசவன் -- மேஷம்
நாராயணன் - ரிஷபம்
மாதவன் - மிதுனம்
கோவிந்தன் - கடகம்
விஷ்ணு - சிம்மம்
மதுசூதனன் -- கன்னி
திருவிக்ரமன் - துலாம்
வாமணன் - விருச்சிகம்
ஸ்ரீதரன் - தனுசு
ரிஷிகேசன் - மகரம்
பத்மநாபன் - கும்பம்
தாமோதரன் - மீனம்
வைஷ்ணவ சம்ப்ரதாயப்படிக்கு தனியாக நவ கிரகங்கள் கிடையாது
எல்லாம் மஹா விஷ்ணுவே !!!!! அதனால் தான் பெருமாள் கோவிலில்
நவகிரக சந்நிதி கிடையாது ...
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிரகம் நட்பு , பகை
என்ற வகையில் செயல்படும் ... அதாவது ஒரு கிரகத்தின்
தசையில் ஒவ்வொரு கிரகம் பாசகன் , போதகன் , காரகன் , வேதகன்
என்று செயல் படுவார்கள் ...
கிரக தசை பாசகன் போதகன் காரகன் வேதகன்
சூரியன் (-) சனி (+)செவ்வாய் (+) குரு (+) சுக்கிரன்
சந்திரன் (-) சுக்கிரன் (+)செவ்வாய் (+) சனி (+) சூரியன்
செவ்வாய் (+) சூரியன் (+) சந்திரன் (+) சனி (-) புதன்
புதன் (+) சந்திரன் (-) குரு (+) சுக்கிரன் (+) செவ்வாய்
குரு (-) சனி (+) செவ்வாய் (+) சந்திரன் (-) சூரியன்
சுக்கிரன் (+) புதன் (+)சூரியன் (-) குரு (-) சனி
சனி (+) சுக்கிரன் (+) சந்திரன் (-) குரு (+) செவ்வாய்
பலன்கள் :
பாசகன் : உயர்தர போஜனம் , ஆடை , ஆபரணம் ,அதிகாரம் , பணவசதி , வீடு, வாகனம் , வெற்றி , நல்ல திடகாத்திர உடல் , சுகம் .உற்சாகம் போன்றவை கிடைக்கும் ..
போதகன் : லாபம் , அதிகாரம், அரசியலில் நன்மதிப்பு , கௌரவம் ,
உயர்ந்த கல்வி , கல்வியால் செல்வம் , நல்ல புகழ், சுக போகங்கள் ,
போன்றவை கிடைக்கும் .
காரகன் : செல்வ சிறப்பு , அதே சமயம் ஏழ்மையும் அடுத்தடுத்து
ஏற்படும், மனைவி , குழந்தைகள் போன்றோருக்கு பிணி , கஷ்டங்கள்
கொடுக்கும் . பண விஷயத்திலும் கஷ்டம் ஏற்படும் ..
வேதகன் : திருடர் பயம் , நெருப்பு பயம் , பகைவர்களால் துன்பம் ,
அரசாங்கத்தால் தண்டனை , பரதேச சஞ்சாரம் , பண நஷ்டம் , துயரம் , போன்ற துன்பங்கள் ஏற்படும் ...
நன்றி